பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டு இலக்கியக் கதைகள்

77

இருதரப்புப் படைகளிடையிலும் வந்து போர் நிறுத்தக் கட்டுப்பாடுகளை அமைக்க முன்வந்தனர். அச்சமயம் தீவினையால் ஆர்தர், நண்பர் ஒருவர் காலில் ஓர் அரவம் தீண்ட அதனைக் கொல்ல அவர் வாளுருவினார். ஐயமும் வெறுப்பும் நிறைந்த அச்சூழ்நிலையில் ஏன் என்றோ யார் என்றோ கேட்பவர் யார்? எதிரிகள் சூழ்ச்சி செய்தனர் என்று கொண்டு இருதரப்பாரும் ஒருவர்மீதொருவர் பாய்ந்து விழுந்தனர். பலர் போருக்கு முனைந்திராததனால் கவசம் கூட அணிய நேரமின்றிப் போரில் குதித்தனர். அச்சமயம் நாற்புறமும் உறைபனி வேறு சூழ்ந்ததால் யார் பகைவர் யார் நண்பர் என்று பிரித்தறியக் கூடாமல் பலர் தம் நண்பரையே கூட வெட்டித்தள்ளினர். ஆர்தர், தம் எக்ஸ்காலிபர்° என்ற வாளினால் சென்றவிடமெல்லாம் பிணக் குவியல்களை நிறைத்தார். ஆர்தரின் வட்டமேடையில் மீந்து நின்ற சிலரும் நெற்பயிரிடையே காட்டுப்பன்றிபோல் நாற்புறமும் அழிவு செய்தனர். ஆனால், போரில் எப்பக்கம் வெற்றி என்பதை அறியமடியாதபடி போர்க்கள முற்றிலும்

உறைபனியால் மூடியிருந்தது.

மாலையில் உறைபனி சற்றே விலகிற்று அப்போது ஆர்தர் போர்நிலைமையை ஒருவாறு உணர்ந்துகொண்டார். கெரெய்ன்டும் அவனுடைய டெவன் நாட்டு வீரரும் இவ்வளவு குழப்பத்திடையேயும் அணி குலையாமல் நின்று இறுதித் தாக்குதலுக்குக் கச்சை கட்டுவதைக் கண்டு மகிழ்வுற்று அவர்கள் முன்புறம் தாக்கும்போது தாமும் தம் வீரரும் மறுபக்கம் சுற்றி வந்து தாக்கினார்.

மாட்ரெட் படையின் ஒரு பகுதி கெரெய்ன்டு படைக்கு ஆற்றாது ஓடிற்று. கெரெய்ன்டு அவர்களைத் துரத்திக் கொண்டோடுகையில் ஓர் அம்பு தலையணியின் பிறவொன்றி னூடாக ஊடுருவிச் சென்று, அவனைக்கொன்றது. அவன் வீரர், அவன் வீழ்ச்சிக்குப் பழிவாங்கும் வண்ணம் படை வீரர்களைப் பின்னும் துரத்திக் கொண்டோடினர்.