இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
116
--
அப்பாத்துரையம் - 40
இருதரப்புக்கும் பொதுவாக, பெர்செபோனீ ஆறு மாதம் தன் கணவன் ஏடீசுடன் பாதாளத்தில் இருக்க வேண்டுமென்றும், மீதி ஆறு மாதம் பூவுலகில் தன் தாயுடன் இருக்க வேண்டுமென்றும் தெய்வங்கள் தீர்ப்பளித்தனர்.
மழைக்காலமான ஆறு மாதத்தில் அவள் பூமிக்கடியில் பாதாள உலகில் இருப்பாள்; இளவேனில் வந்தவுடன், அவள் மீண்டும் உலகுக்கு வருவாள்; அப்போது பயிர்கள் விளையும், மரங்கள் பழுக்கும், மலர்கள் பூக்கும்.