பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




128

அப்பாத்துரையம் 40

-

பெனிலோப்புக்கு ஒடிஸியஸ் அவள் காதலுக்குரியவனாக மட்டுமே காட்சியளித்தான். அவன் நாட்டு மக்களுக்கோ அவன் நல்ல சட்டதிட்டங்களமைத்து, தீமையகற்றி நன்மை பெருக்கிய நாட்டுத் தந்தையாக மட்டுமே தோன்றினான். அதேசமயம் உலகெங்கும் அவன் ஒப்புயர்வற்ற வீரத்தின் புகழும் சூழ்ச்சித்திறத்தின் புகழும் பரவியிருந்தன. ஆனால், ஒடிஸியஸின் உள்ளத்தின் உள்ளே இவை எதனாலும் முழு மனநிறைவு ஏற்படவில்லை. ஏதோ ஒரு குறை அவன் நெஞ்சின் ஆழ்தடத்தில் குருகுருத்துக் கொண்டிருந்தது. அது வேறு எதுவுமல்ல, உலகஞ் சுற்றித் திரிந்து, கடக்கரிய கடல்கள், அணுகுதற்கரிய தீவுகள், குகைகள் நெஞ்சந்துணுக்குறச் செய்யும் இடையூறுகள் ஆகியவற்றில் குளிக்க எண்ணி அவன் உடல் தினவெடுத்தது. டிராய் நகரிலிருந்து மீளும் வழியில், கிரேக்கருடன் சற்று நேர் வழி நீங்கிச் சுற்றித் திரிந்து, இதாகா வர அவன் எண்ணினான்.

சுற்றித் திரியும் ஆவலில்கூட அவன் பெனிலோப்பை மறந்துவிடவில்லை. அவளை விட்டுப் பிரிந்து போரிலேயே பத்தாண்டு சென்றுவிட்டது. ஆனால், பத்தாண்டு சென்றபின் இன்னும் ஒரு அரையாண்டு கழித்துச் சென்றுவிடலாம் என்றுதான் அவன் நினைத்தான். பயணத்திடையே நிகழ்ந்த நிகழ்ச்சிகள் அவ்வெல்லை கடந்து அவனை அலைய வைத்தன.

நெடுநாள் கடலில் அலைந்தும் நேர்வழியில் செல்லாத தால், அவர்கள் உணவு, உடை, தண்ணீர் வசதியில்லாமல் அவதிப்பட்டார்கள். ஆகவே, அவர்கள் ஒரு தீவிலிறங்கி சிகான் என்ற நகரில் புகுந்து தமக்கு வேண்டிய பொருள்பெற எண்ணினார்கள். அங்குள்ள மக்கள் எதுவும் தர மறுக்கவே, போர் மூண்டது. பல நாள் போர்செய்து இருபுறமும் அலுத்தபின், சந்து பேசி, சில பொருள்களே பெற்று மீண்டும் பயணம் புறப்பட்டனர்.

சிகான் தீவு கடந்து ஒன்றிரண்டு நாள் கழிந்தபின் கொடுங் காற்று ஒன்று வந்து அவர்களைத் தெற்கே இழுத்துச் சென்றது. காற்று விரைவில் தென்றலாக மாறிற்று. ளவெயிலும் இளநிலவும் சேர்ந்து எறித்தன. இவ்விடத்தில் இறங்கிச் சற்றுத் தங்கிப் போகக் கிரேக்கர் துடித்தனர்.

அந்தத் தீவுக்குத் தாமரைத் தீவு என்று பெயர். அங்கே மாலைப்பொழுதும் தென்றலும் இளவெயிலும் இளநிலவும்