பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

133

முன்னால் பறக்கவிட்டான். பாறைகள் நெருங்கிப் பறவையைக் கொன்றது. அதன் பின் பாறைகள் விலகின. இச்சமயம் பார்த்து ஒடிஸியஸ் தோழருடன் வேகமாக அக்கடலிடுக்கைக் கடந்தான்.

மற்றோரிடத்தில் கடலின் ஒருபுறம் ஸில்லா என்ற ஆறு தலை அரக்கன் கப்பல்களை விழுங்கக் காத்திருந்தான்.எதிர்ப்புறம் அவனுக்குத் தப்பிச் செல்பவர்களை விழுங்கச் சாரிப்டிஸ் என்ற ஒரு நச்சுச்சுழி காத்திருந்தது. ஆறுதலை அரக்கனுக்குக் கிரேக்கரில் சிலர் இரையாயினர்; சுழிக்கும் சிலர் இரையாயினர். ஆனால் இருபுறமும் அழிவு நடக்கும் நேரத்தில் இடைவழியில் ஒடிஸியஸும் தோழர் சிலரும் தப்பிச் சென்றனர்.

திரினேஸியா என்ற தீவில் அவர்கள் ஓரிரவு தங்கினர். இந்தத் தீவிலுள்ள ஆடுகள் தெய்வீக ஆடுகளாதலால், அவற்றைக் கொன்றால் பெருங்கேடு விளையும் என்று ஸிர்கே எச்சரித்திருந்தாள். ஆனால், ஒடிஸியஸ் உறங்கும்போது கிரேக்கர் ஆடுகளைக் கொன்று தின்றனர். இதன் பயனாகக் கடல் வழி முழுவதும் கொந்தளிப்பாயிற்று. கிரேக்கரனைவரும் அதில் மாண்டனர். ஒடிஸியஸ் மட்டும் மிதக்கும் பாய்மரத்தில் தப்பிச் சென்று, காலிப்லோ என்ற தெய்வமாதின் உதவியால் கரை சேர்ந்தான். அத்தெய்வமாது ஒடிஸியஸிடம் காதல் கொண்டிருந்ததால், எட்டாண்டாகியும் அவனை விட்டுப்பிரிய மனமில்லாது, அவனைத் தன்னுடன் வைத்துக்கொண்டாள். ஆனால், எட்டாண்டுகளின்பின் ஒடிஸியஸ் வேண்டுகோளுக் கிரங்கி அவள் அவனைத் தன் நாட்டுக்கு அனுப்பினாள்.

கடைசியாக மீட்டும் ஒரு தடவை ஒடிஸியஸ் கப்பலுடைந்து அவன் உயிருக்கு ஊசலாடினான். ஆனால், இங்கும் வெள்ளாடையுடுத்த ஒரு பெண்

அவனைக் காப்பாற்றினாள். அவள் அந்நாட்டு அரசன் அல்ஸினஸின் புதல்வி நாசிகா. அவளுதவியும் அவள் தாய் தந்தை உதவியும் பெற்று ஒடிஸியஸ் தன் நாடாகிய இதகா வந்து சேர்ந்தான்.

இதகா வந்து சேர்ந்தும்கூட ஒடிஸியஸின் இடையூறு களுக்கு ஒரு முடிவுவரவில்லை. கிரேக்கரின் குலதெய்வமாகிய அதேனெ அவன் முன்தோன்றி மனைவியை நேரே பார்க்கச் செல்லக்கூடாது என்று தடுத்தது.