பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




148

அப்பாத்துரையம் 40

-

“ஆனால்,” என்று தொடங்கிக் கண்சாடை காட்டிற்று மூன்றாவது குரல்.

அதைத் தொடர்ந்து, “அதோ அடுப்பில் இப்போது எரிகிறதே அந்தக் கட்டை,” என்று ஒரு குரல் தொடங்கிற்று; இது முதற்குரல்.

"முழுவதும் எரிவதற்குள்ளாகவே,” இது இரண்டாவது குரல். “உன் புதல்வன் வாழ்வு முடிந்துவிடும்,” இது மூன்றாவதுகுரல். மூன்று உருவங்களும் மறைந்தன. தாய் நடுங்கினாள்.

பிள்ளைப்பாசம் அவளைத் தட்டி எழுப்பிற்று. அவளுக்கு அறிவையும் சிந்தனையாற்றலையும் அளித்தது. அவள் விரைந்து எழுந்தாள். படபடப்புடன் அடுப்பில் எரிந்துகொண்டிருந்த அந்தக் கட்டையை வெளியே எடுத்து நீரூற்றி அணைத்தாள்.

கட்டை முழுதும் எரியவில்லை. பாதி எரிந்தபடியே இருந்தது. அதை எவரும் எரித்துவிடாமல் தன் அணி மணிப்பெட்டியின் உள்ளறையில் வைத்துப்பூட்டினாள். இனி, பிள்ளையின் வாழ்வு பற்றிய கவலை இல்லை என்று அவள் தேறி இருந்தாள்.

ஊழின் வாயிலிருந்து தன்பிள்ளையின் வாழ்வை அவள் பறித்தெடுத்துக் காத்தாள். ஆனால், அதே தாய் கையே அந்தப் பிள்ளையின் வாழ்வை மனமறிய ஊழின் கையில் கொண்டு சென்று திணித்தது. தாய்மட்டுமல்ல, தாயும் அவளுடன் போட்டியிட்டு அவனை உரிமையுடன் நேசித்த இன்னொரு பெண்ணும் - அவன் மனைவியும் - மனமார அவன் ஊழின் கட்டைக்குத்தாமே தீ வைத்து அது எரிவதை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.

தாயின் உள்ளத்தில் இத்தகைய நிகழ்ச்சியை ஏற்படுத்தியது நிகழ்ச்சியை எது? அல்லது நிகழ்ச்சிகள் யாவை?

மெலீகர், பொன்மறியின் பொன் கம்பிளி நாடிச் சென்ற வீரர்களுள் ஒருவன். அவன் தந்தை காலிடோன் மன்னன் ஒளியஸ் பொன்மறித்தேட்டத்திலிருந்து திரும்பிவந்தபின் மெலீகர் நீண்ட பயணத்தைப்பற்றியும் அதில் நேர்ந்த இடை யூறுகள் பற்றியும் தந்தையிடம் விரித்துரைத்தான்.