பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




150

||--

-

அப்பாத்துரையம் 40

திறங்கண்டு மெலீகர் அவளை மிகவும் நன்கு மதித்து நேசித்தான். அவள் மணமாகாதவளாயிருந்தால், கட்டாயம் அவளை மணந்திருப்பான். அவளும் அவனை ஏற்றிருப்பாள். ஆனால், காதலுக்கு இடமில்லாமலே அவர்களிடையே ஒருவர்க் கொருவர் மதிப்பும் நேசமும் வளர்ந்தன. போரில் இருவர் குதிரைகளும் ஒன்றையொன்று வளையமிட்டன.வேட்டையில் ஒருவர் அம்பும் மற்றொருவர் அம்பும் தம்முன் இணைந்து பழகின.

பலநாள் திரிந்து வேட்டையாடி அவர்கள் பன்றியைக் காலிடோன் எல்லையிலிருந்து நெடுந்தொலை துரத்தினர். ஆனால், அதை ஒழிக்காமல் இருவரும் ஓய்வு கொள்ள இணங்கவில்லை. இரண்டுநாள் இருவரும் கண்ணயராமல் தொடர்ந்தும் அது அவர்கள் கண்ணில் படாமல் ஓடி ஏய்த்துக் கொண்டிருந்தது. மூன்றாவது நாள் ஒருபெரும் பாறை ஒன்றை அவர்கள் அணுகிய போது, பின்னாலிருந்து அவர்கள் பன்றியின் உறுமலைக் கேட்டனர். அச்சமயம் பின்னாலிருந்துவந்த வேடுவர் படைமுழுவதும் அதன்மீது பாய்ந்தது. அது அத்தனை பேரையும் கால்வேறு கைவேறாகப் பெயர்த்தெறிந்து பின்னும் கும்மாள மடித்தது.தொலைவிலிருந்து வந்த சிலரும் அதை அணுக அஞ்சி

நடுங்கினர்.

அட்லாண்டா சட்டெனத் திரும்பித் தன் வில்லை வளைத்து நாணேற்றி அம்பெய்தாள். அது பன்றியின் நெற்றிப் பட்டத்தில் தைத்தது. அது அலறிக்கொண்டு விழுந்து புரண்டது. அதன் குருதி எங்கும் பரந்தது; ஆனால், அப்போதும் அது வாளா இறக்க மனமின்றி முழுமூச்சுடன் திமிறி எழுந்தது. அது இறுதி நேரப் பாய்ச்சலென்றும் பாராமல், மெலீகர் அதன்மீது தன் ஈட்டியைச் செலுத்தி அதைக் கொன்றான். மற்ற வேடரும் பன்றி ஒழிந்தது என்ற மகிழ்ச்சியில் ஆரவாரத்துடன் வந்து உரியது,” என்றாள்.

மெலீகர் மேலும் வற்புறுத்தி, "நான் கொல்லாவிட்டாலும் உங்கள் அம்பால் இது சிறிதுநேரத்தில் செத்தேயிருக்கும். நான் உடனே அதைக் கொன்றது வேட்டுவரின் தோழமை உரிமை யினால்தான். ஆகவே, அதே தோழமை உரிமைப்படி தோலைப் பெற்றுக் கொள்க,” என்றான்.