பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

157

நாளடைவில் எவரும் போட்டிக்கு வருவதே அரிதாயிற்று. அட்லாண்டா இனி, கன்னியாகவேதான் காலங்கழிப்பாள் என்று பலரும் கருதி இருந்தனர்.

மிலானியன் என்பவன் ஒரு வேட்டுவ இளைஞன். அவன் வேடிக்கை பார்க்க ஷெணியஸின் நகருக்கு வந்திருந்தான். அன்றுதான் அட்லாண்டாவுடன் கடைசித் தடவையாக ஓர் இளைஞன் போட்டியிட்டான். மிலானியன் அப்போட்டியில் கண்ணும் கருத்துமாயிருந்தான். இளைஞன் போட்டியில் வென்றால்,போட்டியிட்ட அப்பெண்ணை மணந்துகொள்வான் என்று பிறர் கூறக்கேட்டான். இளைஞன் போட்டியில் வெல்வான் என்றே அவன் எண்ணினான்.

மிலானியன் எதிர்பாராதவகையில், அரசனும் பொது மக்களும் இளைஞன் பக்கமே ஆதரவு காட்டினர். ஒருவர்கூட அந்த அழகிய நங்கை வெல்ல வேண்டும் என்று விரும்பியதாகத் தெரியவில்லை. இது கண்டு அவன் வியந்தான். ஆனால், எல்லோரும் இளைஞனை ஊக்கியும், முதல் சுற்றிலேயே அந்தப் பெண்ணுடன் ஓடமுடியாமல் அவன் சோர்வுற்றான். இரண்டாவது சுற்றுக்குள் பெண் இளைஞனைத்தாண்டி நெடுந்தொலை சென்று விட்டாள்.

ளைஞன் தோற்றுவிட்டான். எல்லார் முகத்திலும் ஊக்கக்கேடு மட்டுமல்லாமல், வருத்தமும் மேலிட்டது.இதற்கான காரணத்தையும் இளைஞன் உணரவில்லை.

ஆனால், கூட்டம் கலையவில்லை. பெரிய வாளுடன் ஒரு வீரன் வந்தான். இளைஞன் கைகால் கட்டுண்டு களத்தின் நடுவே நிறுத்தப்பட்டான்.

அப்போதுதான் மிலானியனுக்கு எல்லாரும் வருந்தியதன் காரணம் தெரிந்தது. போட்டியில் தோற்றதனால், இளைஞன் தான் விரும்பிய நங்கையை இழந்ததுடன் நிற்கவில்லை; அவன் உயிரையும் இழக்கவேண்டி வந்தது.

அழகிய இளைஞனின் தலை மண்ணில் உருண்டது. அவன் பொன்முடியில் அவன் குருதியும் மண் புழுதியும் படிந்தன.