பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6. பெர்ஸியஸ்

(கிரேக்க புராணக் கதைகளினிடையே ஓர் அழகிய சிறு காவியம் பெர்ஸியஸ் கதை. அதே

ஆர்கஸ்நகரின் அரசன் அக்ரிசீனுக்குத் தனே என்ற ஒரு புதல்வி இருந்தாள். அவள் வளரவளர அவள் அழகும் வளர்ந்தது. ஆனால், அவள் தந்தை அவள் வளர்வது கண்டு மகிழ்வதற்கு மாறாகக் கவலை கொண்டான். ஏனென்றால், அவள் வயிற்றில் பிறக்கும் பிள்ளையே பாட்டனைக் கொன்று நாட்டைக் கைக் கொள்ளும் ம் என்று வருபொருளுரைப்போன் ஒருவன் கூறியிருந்தான்.

அவன்

அவளைக் கொன்றுவிடலாமொன்று அவன் அடிக்கடி நினைப்பான். அதற்கு மனம் வரவில்லை. ஆகவே, அவள் பிள்ளையே பெறாமலிருக்கும்படியாக, அவளை ஆண்கள் கூட்டுறவிலிருந்து விலக்கி வைத்துவிட எண்ணினான். இவ் எண்ணத்துடன் அவள் பருவமடையுமுன்னே கடற்கரையடுத்து எவரும் அணுக முடியாத கொடும்பாறை ஒன்றின்மீது பித்தளையால் இழைத்த ஒரு பெருங் கோபுரம் கட்டுவித்தான். அதன் கீழறைகள் ஒருசிறு வாயில்தவிர, வேறு பலகணியோ வாயில்களோ இல்லாமல் செய்யப்பட்டிருந்தன. கீழறைகள் நிறைய உணவுப்பொருள்கள் நிரப்பப்பட்டிருந்தன. மேல்தளத்தில் பெண்களுக்கு வேண்டிய எல்லாத் தனியறை வசதிகளும் செய்யப்பட்டிருந்தன.

தனே பருவமடையும் தறுவாயில் அரசன் அவளையும், அவள் பாங்கியர்களையும் கோபுரத்தைப் பார்வையிடும்படி அழைத்துச் சென்றான்.கீழறைகளில் உணவுப்பண்டங்கள் கண்டு அவர்கள் வியப்படைந்தனர். ஆனால், மேலே போகப் போகக் கோபுரத்தின் பளபளப்பான பித்தளைச் சுவர்களின் அழகும், பெண்டிர் இன்ப வாழ்வுக்கும் ஒப்பனைக்குமுரிய மாட