பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டுக் கதைக் கொத்து

163 கூடங்களும் அவர்கள் கண்களைக் கவர்ந்தன. அவர்கள் அவற்றில் தம்மை மறந்து விளையாடி யிருந்தனர். அரசனும் அவனுடன் வந்த ஒருசில ஏவலாளரும் இதுசமயம் பார்த்து மெல்ல நழுவிச் சென்றுவிட்டனர். கோபுரத்தினுள் நுழை வதற்கான ஒரேவாயில் வெளியிலிருந்து அடைபட்டது. அதனை அடைவதற்கான ஒரே பாலமும் அழிக்கப்பட்டது.

பெண்டிர் நெடுநேரம் சென்றபின்பு தாம் தனிப்பட்டு விட்டதையும் கோபுரத்தில் அடைபட்டதையும் கவனித்தனர். அவர்கள் கூக்குரலிட்டனர்; அழுதனர்; தொழுதனர். ஆனால், அலைகளின் தொலை இரைச்சல் தவிர அவர்களை எதுவும் அணுகவில்லை. அவர்களுக்குத் துணையாக விடப்பட்ட ஏவலாள் ஒருவனே. அவனும் ஊமையும் செவிடுமான ஓர் அலி. அவர்களுக்கு உணவு வட்டிக்கும் பொறுப்பும், நாள்தோறும் படகில்வரும் புதிய பால் முதலிய பொருள்களைக் கயிறு கட்டிக் கூடைகளில் பலகணிவழியே பெறும் பொறுப்பும் அவனிடம் விடப்பட்டிருந்தது.

நாட்கள் பல சென்றன; தனே பருவமடைந்து முன்னிலும் அழகுடையவளாய்த் திகழ்ந்தாள். ஆனால், அவள் வாழ்வில் மகிழ்ச்சியில்லை. தன் தந்தையே தன்னைச் சிறைப்படுத்தியதை எண்ணி எண்ணி அவள் மனமாழ்கினாள். தேவர்கள் தந்தையாகிய ஜீயஸ் பெருமானை அவள் அவள் நாள்தோறும் வழிபட்டுக் குறையிரந்தாள்.

தனேயின் கனவில் ஜீயஸ் பொன்முகில்மீது தவழ்ந்து வந்து காட்சியளித்தான். அவள் தன்வழிபாடு நிறைவேறியது கண்டு மகிழ்ந்து மெய்ம்மறந்தாள். கனவு அரைக்கனவாக நீண்டது. ஜீயஸ் அழகிய மனித உருவுடன் வந்து அவளுடன் உரையாடி னான். அவன் ஜீயஸ் என்பதை அவள் சிறிது நேரத்தில் மறந்தாள். இளைஞன் உருவில் ஜீயஸ் அவளுடன் அளவளாவிப் பேசினான்.

அடுத்தநாள் முதல் தனேயின் வாழ்வில் மாறுதல் ஏற்பட்டது. இரவில் கண்ட பொன்மயமான அழகிய வடிவிடம் அவள் ஈடுபட்டாள். தொடுத்து மூன்று இரவுகள் கழிந்தபின், ஜீயஸ் பழையபடி தன் ஒளி உருவம் காட்டி விடை பெற்றுக்கொண்டான். “கண்மணி தனே, நான் உன் வழிபாட்டில் ஈடுபட்டு விட்டேன். ஆனால், அதற்காகமட்டும் வரவில்லை; என்