8
அப்பாத்துரையம் – 40
மனத்தில் அப்போது பிரிட்டன் நாட்டின் குழப்பம் தீரும்படி தமக்கு ஒரு நற்புதல்வனில்லையே என்ற கவலை நிறைந்திருந்தது. அச்சமயம் வானளாவ எழுந்த ஓர் அலைமீது ஒரு கப்பல் தெரிந்தது. அதில் உள்ள மனிதர் அனைவரும் (பிற்காலத்திய ஆர்தருருவைப் போலவே) நெடிய வெண்பொன் உருவ முடையவராகவும், வெள்ளிய ஆடை உடுத்தியவராகவும் இருந்தனர். அதர் கண்களுக்கு அவர்கள் மனிதராக தோற்றவில்லை. தேவர்களாகத்தான் காணப்பட்டனர். அவர்களைக் கண்டு அரசன் மிகவும் வியப்படைந்தான். ஆனால், மெர்லின் அவர்களை எதிர்பார்த்தே அரசனுடன் அங்கே வந்ததாகத் தெரிந்தது.
ாகவே
கப்பல் சற்று நேரத்தில் கண்ணுக்கு மறைந்துவிட்டது. மெர்லின் அதரைக் கூட்டிக்கொண்டு குன்றிலிருந்து கடற் கரையில் இறங்கியவர்கள் தான். அப்போது அவர்களை நோக்கித் தெளிவா கெஒன்பது அலைகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து வீசின. அவற்றுள் கடைசி அலை ஓரழகிய ஆண் குழந்தையைக் கரைமீது கொண்டுவந்து ஒதுக்கிற்று. மெர்லின் அக்குழந்தையை எடுத்து அதர் கையில் தந்து, இதோ! உமது கால்வழியில் பிரிட்டனை ஆளப்போகும் உரிமை பெற்றவன் என்று கொடுத்தான்.
அதர்மீதுள்ள வெறுப்பைப் பெருமக்கள் இச்சிறு பிள்ளைமீதும் காட்டிவிடப்படாதென அஞ்சிய மெர்லின், அதனை ஆண்டன் பெருந்தகை" என்ற ஒரு வீரனிடம் விட்டு வளர்க்கச் செய்தான். ஆர்தர் வளர்ச்சியடைந்து வருகையில் மெர்லினே அடிக்கடி வந்து அவருக்குக் கல்வியறிவும் படைக்கலப் பயிற்சியும் தந்தான். அந்நாளைய எல்லாவகை அறிவிலும் மேம்பட்டிருந்த மெர்லின் தன் மாயமும் மந்திரமும் நீங்கலாக எல்லாக் கலைகளிலும் ஆர்தரை ஒப்புயர்வற்றவராக்கினான்.
ஆர்தர் வீரத்திலும் அறிவிலும் சிறப்புமிக்க சிறுவராயி ருந்ததுடன் அன்பும், கனிவும் மிக்கவராகவுமிருந்தார். தாய் தந்தையர் அவர் தமக்கை பெல்லிஸெண்டைக் கொடுமைப் படுத்துவதுண்டு. ஆர்தர் அவளைப் பார்க்கப் போகும்தெல்லாம், அவளுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றுவார். அவள் மணமான பின்பும் ஆர்தரிடம், உடன் பிறப்பாளரிட மும்கூடப் பிறர் காட்டாத அளவு அன்பு உடையவளானாள்.