பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டு இலக்கியக் கதைகள்

9

மெர்லின் ஆர்தருக்குக் கல்வி புகட்டியதேயன்றி அவர் வாழ்க்கையில் அவருக்கு வெற்றிதரப் பேருதவியாயிருந்த எக்ஸ்காலிபர்” என்ற வாளைப் பெறவும் உதவியாயிருந்தான். ஒரு நாள் ஆர்தர், மெர்லினுடன் ஓர் ஏரிக்கரையோரமாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது முன் ஆர்தர் பிறப்பின் போது ஏற்பட்டதே போன்ற அரிய காட்சி ஒன்று தோற்றியது. நீர் நடுவில் வெண்பட்டாடையுடுத்திய ஒரு வெண்மையான கை பேரொளி வீசும் வாள் ஒன்றை ஏந்தி, மேலெழுந்து, அவ் வாளை மூன்றுமுறை சுழற்றியது, மெர்லினின் தூண்டுதலின்பேரில் ஆர்தர் ஒரு படகில் சென்று அதைக் கைக்கொண்டார். உடனே அக்கை வியக்கத் தக்க முறையில் நீருக்குள்ளேயே போயிற்று.

ஆர்தர் எடுத்த வாளின் பிடி பலவகை மணிக்கற்கள் பதித்த தாயிருந்தது. வாளின் ஒரு புறத்தில் 'என்னைக் கைக்கொள்' என்றும், இன்னொருபுறம் 'என்னை எறிந்து விடு' என்றும் எழுதியிருந்தது.பிந்திய தொடர் கண்டு ஆர்தர் முகம் சுண்டிற்று. மெர்லின் அதுகண்டு, வீசியெறியும் நாள் இன்றில்லை; அண்மையிலுமில்லை. அதற்கிடையில் அதனை வைத்துக் கொண்டு நீ எத்தனையோ வெற்றிகளை அடையப் போகிறாய்” என்றாள்.

அதருக்குப்பின் அவர் ஆண்ட காமிலட்18 (அஃதாவது லண்டன்) நகரில் நெடுநாள் அரசரில்லை. பெருமக்கள் சச்சரவினால் பெருங்குழப்ப மேற்பட்டிருந்தது. ஆர்தர் இப் போது இளைஞராய்விட்டபடியால் அவரை அரசராக்கிவிட வேண்டுமென்று மெர்லின் முடிவு கொண்டாள். ஆனால், ஆர்தர் அதரின் பிள்ளை என்று ஒருவருக்கும் தெரியாது. அதனை அவர்கள் எளிதில் ஏற்கும்படி அவன் ஓர் ஏற்பாடு ய்ெதான். காமிலட் அரண்மனையின் ஒரு மூலையில் சலவைக்கல் ஒன்றில் ஒரு வாள் பதித்துவைக்கப்பட்டிருந்தது. வாளின் பிடி மட்டும் வெளியிலும் மற்றப் பகுதி முழுவதும் கல்லினுள்ளாகவும் இருந்தது. அவ் வாள் பதித்திருந்த கல்மேல் “என்னை வெளியே இழுப்பவன் இந்நகருக்கு மட்டுமன்றிப் பிரிட்டன் முழுமைக்குமே அரசனாவான்" என்றெழுதியிருந்தது.

மெர்லின், பெருமக்களை அதன் முன் அழைத்து வந்து "நாடு நெடுநாள் அரசனில்லாமல் சீரழிகின்றது. விரைவில் ஓர்