பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12

||_ _

அப்பாத்துரையம் – 40

போர் முடிந்த பின்னும் அமைதியை ஏற்படுத்தும் பொறுப்பும் மீந்திருந்த புறப்பகைவரை ஒடுக்கும் பொறுப்பும் ஆர்தரையும் அவர் வீரரையும் சார்ந்தன. ஆகவே, கினிவீயரைச் சென்று காண அவருக்கு நேரமில்லை. ஆயினும், கினிவீயர் இல்லாமலும் அவர்தம் வாழ்க்கை நிறைவடையாதென் றெண்ணினார். ஆகவே, தம் வீரருள் தலைசிறந்தவரான லான்ஸிலட்டை லியோடகிராமிடம் அனுப்பிப் பெண் பேசச் செய்தார்.

லியோடகிராம் முதலில் பெரிதும் தயங்கினார். ஆர்தர் ஆட்சியோ புதிய ஆட்சி. மேலும் பலர் அவர் அதர் பிள்ளையல்லர்; கார்லாய்ஸின் பிள்ளையோ அல்லது வேறு துணையற்ற எடுப்புப் பிள்ளைதானோ என்று பேசிக் கொள்வதையும் பெருமக்கள் வெறுப்பதையும் கேட்டு அவர் பின்னும் கலக்கமடைந்தார். ஆனால், லான்ஸிலட்டுடன் சென்ற பெடிவியர்ப் பெருந்தகை24 அவர் பிறப்பைப்பற்றி மெர்லின் கூறியதையும் அவர் கையிலிருக்கும் என்ஸ்காலிபரின் சிறப்பையும் அவர் வெற்றிகளையும் எடுத்துச் சொன்னபின் ஆர்தர் சார்பாக லான்ஸிலட்25 கினிவீயர் இளவரசியைக் காண அவர் இணங்கினார்.

வாழ்க்கையின் போக்கில் காற்றில் பறக்கத்தகும் சிறிய துரும்புகள் ஊழ்வலியின் ஆற்றலிற்பட்டு மலைகளையும் வீசியெறியும் பெருஞ் சுரங்க வெடிகளாக மாறிவிடுகின்றன. ஆர்தர், நேரில் வந்து கினிவீயரை மணக்க நேராமல் லான்ஸிலட்டை அனுப்பியது அவர் வாழ்வின் போக்கையும் லான்ஸிலட், கினிவீயர் ஆகியவர்களையும் பிரிட்டனின் எதிர் காலத்தையும் கூட மிகுதியும் மாற்றும் தீவினையாக மாறிற்று. கினிவீயரின் பார்வையில் ஆர்தர் வீரமும் பெருந்தன்மையும் ஒன்றும் பெரிதாகத் தோற்றவில்லை. லான்ஸிலட்டே அவள் உள்ளங் குடிகொண்ட உரவோன் ஆயினான். அவர்களிருவரும் யார் சார்பின் கூடினோம் என்பதை மறந்து ஒருவருடன் ஒருவர் நட்புப் பூண்டுவிட்டனர். ஆனால், அவர்கள் நட்பு மணவினையாக மாறமுடியாதென்பதை இருவரும் உணர்ந்தனர். லான்ஸிலட் தன் தலைவனுக்கு மாறாக நடக்கத் துணியவில்லை. கினிவீயரும், ஆர்தருக்குத் தன்னை மணஞ்செய்து கொடுக்கத்