பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18

|___

அப்பாத்துரையம் – 40

லயோனெலையும் பிறரையும் அடைத்த மாளிகையே ஆற்றுக்கடவை அடுத்த அவன் மாளிகை.

30

துர்க்கைனின் கொடுமைகளைக் கேட்டு அவனை எதிர்க்கும் எண்ணத்துடன் எக்டார் பெருந்தகை என்ற ஆர்தரின் இன்னொரு வீரனும் அப்பக்கம் வந்தான். துர்க்கைன் மாளிகையருகே ஒரு மரத்தில் ஆர்தர் வீரர் பலரின் கேடயங்களைக் கண்டு அவன் சீற்றமும் மன வருத்தமும் கொண்டு மாளிகையை நோக்கிப் புறப்பட்டான். அப்போது வேட்டையாடி மீண்டு வந்து கொண்டிருந்த துர்க்கைன் அவனைப் பின்புறமிருந்து தாக்கினான். எக்டர் தன் திறமெல்லாங் கொண்டு அவனைத் தாக்கியும் பயனில்லாமல் போயிற்று. அவனைத் துர்க்கைன் கீழ்ப்படியும்படி கோரியும் தூய வீரனாகிய எக்டார் அதற்கு இணங்கவில்லை. ஆகவே துர்க்கைன் அவனையும் மற்றவர்களைப்போல் முள்ளிலும் கல்லிலும் கட்டி இழுத்துச் சிறையிலிட்டுத் துன்புறுத்தினான். சிறையில் எக்டார் லாயோனெலைக் கண்டு வியப்படைந்து லான்ஸ்லட் எங்கே? என்று கேட்டான். லயோனெல் கடந்த செய்திகளை விரித்துக்கூறி லான்ஸிலட்டைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை, என்று

சொன்னான்.

இவ்வளவு ஆர்ப்பாட்டங்களுக்கிடையிலும் லான்ஸிலட் உறங்கிக் கொண்டு தானிருந்தார். நெடுநேரம் சென்று எழுந்தபோது லயோலெனலைக் காணாமல் அவர் அவனைத் தேடலானார். அப்போது எதிரில் வந்த கந்தை ஆடை உடுத்த ஒரு மாது தன்னைத் துன்புறுத்தும் ஒரு போலி வீரனிடமிருந்து தன்னை விடுவிக்கும்படி கோரினாள். அங்ஙனமே செய்தபின் அம் மாது துர்க்கைனைப் பற்றியும், அவனால் கொடுமைக் குட்படுத்தப்படும் வீரரைப்பற்றியும் கூறினாள். லான்ஸிலட் அவள் காட்டியவழியே துர்க்கைனின் மாளிகை நோக்கிச் சென்றார்.

வழியிலேயே துர்க்கைன் காயம்பட்ட வீரன் ஒருவனை இழுத்துக் கொண்டு வந்தான். லான்ஸிலட் அவ்வீரனை விடுவிக்கும்படி துர்க்கைனுக்கு ஆணையிட்டார். துர்க்கைன் மறுக்கவே, லான்ஸிலட் அவன்மீது போர் தொடங்கினார். லான்ஸிலட்டின் வாள்வீச்சுகள் தான் எதிர்பார்த்ததை விடக்