பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




28

அப்பாத்துரையம் - 40

எதிர்க்காது பணிவதையும், தான் கடுசொல் கூறிப் புண்படுத்துந் தோறும் அவன் மேன்மேலும் இன்சொல்லே வழங்கி வருவதையுங் கண்டு, அவள், தான் இதுவரை அவனைக் கடுமையாக நடத்தியதற்கு வருந்தி மிகவும் பணிவுடன் கழிவிரக்கத்துடனும் மன்னிப்பு கோரினாள். 'இன்னா செய்தாரையும் நன்மையைச் செய்து ஒறுக்கும் தாங்கள் இழிபிறப்பு உடையவராய் இருக்க முடியாது. தங்கள் உண்மை நிலையறியாது இகழ்ந்ததற்கு ஆயிரம் முறை தங்களிடம் நான் மன்னிப்புக் கேட்கவேண்டிய வளாகிறேன்” என்று அவள் வாய்விட்டுக் கூறினாள். தீமைக்கே நன்மை செய்த பெருந்தகையாகிய காரெத், அவள் மனமாற்றமடைந்ததற்கு மகிழ்ந்து அதை பாராட்டுமுறையில் தான் இன்னான் என்பதை அவளிடம் நம்பகமாகக் கூறினான்.

லயானிஸின் மாளிகைக்கு வெளிப்புறமுள்ள ஒரு படர்ந்த மரத்தில் கவசமணிந்த பல வீரர்கள் விழுதுகள் போல் கட்டப் பட்டுத் தொங்கினர். அதைக் கண்டு காரெத்தின் உள்ளம் பொங்கி யெழுந்தது. அவர்கள் அனைவரும் லியோனிஸ் பெருமாட்டியை மீட்கவந்து தோல்வியை யடைந்து செவ்வெளிநாட்டுச் செவ்வீரனால் தூக்கிடப்பட்டவர்கள் என்பதைக் காரெத்துக்கு லினெட் கூறினாள்.

காரெத் அம்மரத்தில் தொங்கிய ஒரு குழலை ஊதியதும் செவ்வீரன் கவசமணிந்து முன் வந்தான். மாளிகையிலிருந்து லியோனிஸ் பெருமாட்டி குழல் ஓசை கேட்டுப் பலகணியில் வந்து காரெத்தின் போரைக் கவனித்து நின்றாள். அவள் அப்போது அவனைத் தன் கனிந்த பார்வையால் ஊக்கியும் வந்தாள். பலமணிநேரம் கடுசண்டை நடந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் வெட்டவும் குத்தவும் தள்ளவும் பார்த்தனர். இறுதியில் செவ்வீரன் கை தாழ்ந்தது “நிறுத்துக; நான் இனி உமது ஆள். உம் விருப்பப்படி நடப்பேன்” என்றான்.

நீ

காரெத், நீ எனக்குப் பகைவனல்ல. நீ செய்த தீங்கெல்லாம் என் தலைவி லியோனிஸ் பெருமாட்டிக்கே அவளை மீட்க வந்த வீரரெத்தனையோ பேரை நீ கொண்டிறிருக்கின்றாய்! அவளிடமே மன்னிப்புப் பெற்று உயிரை அவள் தருங் கொடையாகப் பெறுக' என்றான். லியோனின் பெரு மாட்டியிடம் மன்னிப்புப் பெற்றுச் செவ்வீரன் விடுதலை