பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டு இலக்கியக் கதைகள்

37

பலர், தமது நற்பேறே பேறு. தம் கணவர் தம்மையன்றி வேறெதிலும் நாட்டம் கொள்வதில்லை என்பர். எனிடின் காதுகளுக்கு அதுகூடத் தன்னை குத்தலாகப் பேசியது என்று பட்டது

தூயவீரன் என்று பெயர் படைத்த தன் கணவன், தன் உறவால் கெட்ட பெயரெடுக்கும் படியானது தன் குற்றமே என்று அவள் எண்ணினாள்.

ஆனால், அவள் தன் கண்ணெனப் போற்றிய தன் கணவனிடம் அவனுக்குக் கண்ணுறுத்தலாகும் இவ்வுண்மையினை எங்ஙனம் கூறுவாள்? கடமை ஒருபுறம் சொல்லும்படி முன் தள்ள, கணவனிடம் கொண்ட இயற்கைப்பற்றுப் பின் தள்ள, அவள் பலவாறு அலைக்கழிவு எய்தினாள்.

அவள் துயர், அவள் முகத்திலும் கண்களிலும் வெளிப்பட்டது. கெரெய்ன்டு அதனைக் கண்ணுற்றான். ஆனால், அது பற்றிய வினாக்கள் அவளைத் தலை குனிந்து முகங்கோணச் செய்தனவே யன்றி வேறெதுவும் விடை தருவிக்கவில்லை.

கினிவீயர் போன்ற பெண்மணிகளின் புற அழகின்பின் அகத்தில் கறையிருக்கக்கூடும் என்ற நச்செண்ணம் அவன் தூய உள்ளத்தில் சற்றே வீசிற்று. அது நிலைக்க வில்லையாயினும் அதன் சாயல் அவன் உள்ளத்தில் அவனும் அறியாமல் மறைந்து தங்கிநின்றது.

இன்பவாழ்வில் சொக்கிய கெரெய்ன்டு இரவில் அயர்ந்து உறங்குவான். மக்கள் இகழ்ச் சொற்களெல்லாம் உருப்பெற்று எனிடின் மனக்கண் முன்நின்று அவள் உறக்கத்தைக் கெடுக்கும்.

ஒருநாள் விடியற்காலமாயிற்று. கெரெய்ன்டு இன்னும் உறங்குகிறான். எனிட் அவன் பக்கத்தில் நின்று அவன் மாசற்ற முகத்தை நோக்கிய வண்ணம் தன் மனக்குறையை வாய்விட்டுக் கூறினாள்: “என் கணவன் புகழுக்கு இழுக்காக வாழ்வதிலும் மாள்வதே மேல். உண்மையில் போரில் புகழ்பெற்றுக் கணவன் மாண்டுவிட்டால்கூட மகிழ்ச்சியுடன் உடன் சாவேன். கெரெய்ன்டுக்கு நான் மனைவியானால் அவன் மாண்டும் நான் புகழ் பெறுக,' என்ற சொற்கள் அவளையறியாமல் வெளிவந்தன.