பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டு இலக்கியக் கதைகள்

41

பசியிடை அதை அறியாத கெரெய்ன்டு, இருவரும் உண்பதாக எண்ணி அத்தனையும் உண்டு தீர்த்தான். பின் பையனிடம் உணவுக்கு மாறாக ஒரு குதிரையையும் கவசத்தையும் கொடுத்தான்.பையன், கெரெய்ன்டு ஒரு பெரிய வீரன் என்பதை அறிந்து, தன் ஊர்த்தலைவனிடம் அவனை இட்டுச்செல்ல விரும்பினான். கெரெய்ன்டு அதனை மறுத்து ஒரு விடுதியில் அறையமர்த்தி அதில் எனிடை ஒரு மூலைக்கனுப்பித் தான் ஒரு மூலையில் இளைப்பாறலானான்.

பையன், ஊரெல்லாம் தன் குதிரையைக் காட்டி வீரன் வள்ளன்மையைத் தமுக்கடித்தான். அதுகேட்ட தலைவன் பரிவாரங்களுடன் கெரெய்ன்டைப் பாராட்ட வந்து விட்டான்.

அத்தலைவன் உண்மையில் முன் எனிடை நாடிச் சென்று அவளைப் பெறாது மீன்ட லிமூர்ஸ்2 என்பவனே. அவன், கெரெய்ன்டு, எனிடைப் புறக்கணித்து நடத்துவதைக் கவனித்து அவளிடம் தனிமையில் “உன்னைப் புறக்கணிக்கும் இவனைவிட்டு வந்துவிடு; அவனைக் கொன்று விட்டுக்கூட உன்னை நான் அடையத் துணிந்திருக்கிறேன்" என்றான்.

கணவன் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால் அவனைக் காக்க எண்ணிய எனிட் “அவனைக் கொல்ல வேண்டியதில்லை. நாளைக் காலையில் வா; உன்னுடன் வந்து விடுகிறேன்' என்று கூறினாள்.

இரவு, முற்றும் எனிட் உறங்கவில்லை. விடியுமுன் கெரெய்ன்டிடம் இச்செய்தியைக் கூறினாள். இம் முறை கெரெய்ன்டு அவளிடம் அவ்வளவு கடுமை காட்டவில்லை. ஏனெனில், அவன் சினத்தின் ஒரு பகுதி நயவஞ்சகனான லிமூர்ஸிடம் சென்றது.

உள்வஞ்சகமுடையவனாயினும் உண்டி தந்தவிடத்தில் கலவரம் விளைவிக்க வேண்டா என்ற எண்ணத்துடன் கெரெய்ன்டும் எனிடும் தம் குதிரைகளைக் கொண்டுவரச் சொல்லி வெளியேறினர். விடுதிக்காரனது கடனுக்கு ஈடாகக் கெரெய்ன்டு குதிரைகளில் மீந்த ஐந்தையும், அவற்றிலுள்ள கலங்களையும் எடுத்துக் கொள்ளுமாறு கூறினான். காலையில் நரிமுகத்தில் விழித்தோம் என்று மகிழ்ச்சியுடன் விடுதியாளன் அவர்களை விடை கொடுத்தனுப்பினான்.