பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




46

அப்பாத்துரையம் - 40

பெண்மை முழுவதும் வெளியிட்டலறிய அவ்வலறலில் சற்றுத் தன்னுணர்வு மீண்டு வரும் நிலையில் இருந்த கெரெய்ன்டின் வெறுப்பு முற்றும் எங்கோ பறந்து போயிற்று. அவன் வாளெடுத்துக் கொண்டோடி வந்தான். ஒரு நொடியில் டூர்மின் தலை மண்ணில் புரண்டது.

தலைவன் நிலைகண்ட அவன் ஆட்கள் நெறிகலங்கி

ஓடினர்.

கெரெய்ன்டு, எனிடின் கையைப் பிடித்துக் கொண்டு "நான் என் செவியை நம்பி ஏமாந்தேன்; அறிவைப் பறிகொடுத்தேன். எதில் ஐயம் கொண்டாலும் இனி உன்னிடம், உள் கால்பட்ட இடத்தில்கூட ஐயங்கொள்ளேன் என்று அவளை வாரி அணைத்துக் கொண்டான்.

""

கெரெய்ன்டு குதிரைமீது எனிடுடன் வெளியே வருகையில் முன் அவளை எதிர்த்துத் தோற்றிருந்த வீரனாகிய எடிர்ன் அவர்களுக்கு வணக்கம் செய்து தான் தற்போது முற்றிலும் மனந்திருந்தி ஆர்தரின் வீரருள் ஒருவனாய் விட்டதைத் தெரிவித்தான்.

கெரெய்ன்டு இன்ப வாழ்க்கையில் கடமை மறந்து விட்டான் என்று கேட்டு, டூர்மைத் தாமே எதிர்க்க வந்த ஆர்தர், நடந்தனைத்தும் கேட்டுக் கெரெய்ன்டை முன்போல் அன்புடன் வரவேற்றார்.

கெரெய்ன்டையும்

வாழ்வை அழகு செய்தனர்.

எனிடையும் சுற்றிச்

சிறிய

கெரெய்ன்டுகளும், சிறிய எனிட்களும் தோன்றி அவர்கள்