பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டு இலக்கியக் கதைகள்

51

அடைந்தேன்" என்றான். பலின் அந்தோ! நம் தீவினை இருந்தவாறு! நானே உன் உடன் பிறந்தான் பலின்.இந்த வாளைக் கொடுத்த மங்கை கூறிய எச்சரிக்கையை அசட்டை செய்ததனால் தன் உடன் பிறந்தானையே கொல்லும்படி நேரிட்டது” என்று மனமாழ்கினான்.

பலினும் பலானும் ஒருங்கே இறந்தனர். இருவரும் ஒரே கல்லறையிலேயே அடக்கம் செய்யப்பட்டனர். அவர்கள் வாழ்க்கையின் உள்ளுறை முற்றிலும் அறிந்த மெர்லின் அவர்களை அடக்கம்செய்த இடத்தில் ஒரு வீரக்கல் நாட்டி அதில் அவர்கள் உருக்கமான வரலாற்றைப் பொறிக்கும்படி செய்தான்.