பக்கம்:அப்பாத்துரையம் 40.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேனாட்டு இலக்கியக் கதைகள்

65

கவெயின் சோம்பேறி யாதலால், பின்னும் லான்ஸிலட்டைத் தேடவேண்டியதில்லை, என்று மணியை ஈலேயினிடமே கொடுத்தார். அத்துடன் அவரிடம் நாரதர் பண்பும் சற்று இருந்ததால் லான்ஸிலட்டுக்கு ஒரு காதலி ஏற்பட்டுவிட்டதை அரண்மனை எங்கும் பறைசாற்றிக் கினிவீயரிடமும் கூறிவிட்டார்.

அரசியாகும் பேரவாவால் கினிவீயர் லான்ஸிலட்டைத் துறக்கத் துணியினும் தன்னலமும் தன் போக்கும் மிக்க அவள் அவர்மட்டும் தம் காதலொப்பந்தத்தை விடாதபடி அவர்மீது உரிமை செலுத்தி வந்தாள். ஆகவே, அவர் தன்னையன்றி இன்னொரு பெண்ணின் காதலில் ஈடுபட்டார் என்று கேட்டதுமே அவள் அவர்மீது பெருஞ்சினங்கொண்டாள்.

L

ஈலேயின் லான்ஸிலட் படுகாயமடைந்தார் என் று கேள்விப்பட்டது முதல் ஆஸ்டொலட்டில் அவள் கால் தரிக்கவில்லை. தந்தையிடம் சென்று அவள் தானே அவரைப் பக்கத்திலிருந்து பார்க்கவேண்டுமென்று முரண்டினாள். குடும்பத்தின் ஒரே பெண்ணாகிய அவள் சொல்லை அவள் தந்தையும் சரி, தமையன்மாரும் சரி என்றும் தட்டுவதில்லை. எனவே, டார்ப் பெருந்தகையுடன் அவள் துறவியின் மடத்துக்கு அனுப்பப்பட்டாள். லான்ஸிலட்டின் நிலைமை கண்டு அவள் மிகவும் கலங்கிப்போனாள். ஆயினும் அவள் காட்டிய பரிவும் களங்கமற்ற பற்றுதலும் காதல் வாழ்வில் முறிவுற்றுச் சோர்ந்த லான்ஸிலட்டின் உள்ளத்துக்குக் கிளர்ச்சி தந்ததனால் அவர் விரைவில் உடல்நலமுற்றார். முற்றிலும் அவள்மீது அவர் காதல் கொள்ள முடியாவிடினும் தன்னல மிக்க கினிவீயரின் கட்டுப்பாடு இல்லாதிருந்தால் லான்ஸிலட் அவள் காதலை ஏற்று அவளுக்காவது நல்வாழ்வு கொடுத்திருக்கக்கூடும். அது முடியாது போகவே அவள் மனத்தை வேறு வகையில் திருப்பிவிடலாம் என்று லான்ஸிலட் அரும்பாடுபட்டார்.

தாம் அவளைத் தங்கையாகவே நேசிப்பதாகவும் அவளைவிட மூன்று மடங்கு ஆண்டுடைய தன்னை மறந்து அவளுடனொத்த வேறோர் இளைஞனையே மணக்கும்படியும் அவர் கூறிப்பார்த்தார். ஒன்றும் பயனில்லாமல் போகலாயிற்று. அவள் தந்தையும் உடன் பிறந்தாரும் கூடக் கவலை கொண்டனர். சிறு பிள்ளைத் தனமான சிறுவிருப்பத்தை நயமாகப் பேசி