பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அறிவுச் சுடர்

9

சட்டங்கள் அழியும்; சுவடிகள் அழியா

புலவர் லிட்டன்

அறிவாளிகளின் உரைகள் மட்டுமே பின்னோர்களால் வீணாகச் சிதைக்கப்பட முடியாத செல்வம்.

லாண்டார்

தலைமகனொருவரின் உயிர்க்குருதி போன்றது ஒரு நல்லேடு; அது நறுமணமிட்டுப் பேணப்பட்டு வாழ்க்கை கடந்த பெரு வாழ்வை எதிர்நோக்கிப் பதனம் செய்து வைக்கப்பட்டதாகும்.

(அரியொபஜிட்டிக்கா) மில்ட்டன்

5. கல்வி

இம்மை பயக்குமால்; ஈயக் குறைவின்றால்;

தம்மை விளக்குமால்; தாமுளராக் கேடுஇன்றால்;

எம்மை உலகத்தும் யாம்காணேம் கல்விபோல்

மம்மர் அறுக்கும் மருந்து.

(நாலடியார்)- சமண முனிவர்

கல்வி கற்றவரை எளிதில் நல்வழியில் திருப்பலாம்; ஆனால் ஏமாற்ற முடியாது. எளிதில் ஆளலாம்; ஆனால் அடிமைப்படுத்த முடியாது.

எல்லாம் அறியும் அறிவுதனை விட்டு

புரோ பெருமகனார்

எல்லாம் அறிந்தும் இலாபமங் கொன்றில்லை

திருமூலர் திருமந்திரம்

நான் கற்றுக்கொடுக்க எண்ணுவது அறிவையன்று; அறிவை அறியும் அறிவையே. என் அறிவு வளர வளர, இக்கோட்பாடும் வளர்ந்து வருகிறது.

டாக்டர் ஆர்னால்டு