பக்கம்:அப்பாத்துரையம் 41.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




72

||-

அப்பாத்துரையம் - 41

நம் தந்தையர் அறிவிலிகள் என நாம் நினைக்கிறோம். நாம் அத்தனை அறிவுடையவர்கள் ஆய்விட்டோம். ஆனால் அதே மாதிரி நம்மினும் அறிவுடையவர்களாய் நம் மக்கள் நம்மையும் அதேபோல நினைப்பார்கள் என்பதில் ஐயமில்லை.

45. உணர்ச்சிப்பாங்கு

போப்.

உள்ளத்தின் திரிந்த நிலைகள் ஒரு திடீர் அதிர்ச்சியால் ஏற்படுபவை யல்ல; குழந்தைமைப் போதைய சூழ்நிலைகளின் விளைவுகளேயாகும்.

அறிஞர். ஜே.ஏ. ஹாட்ஃவீல்டு.

நாம் எதை நம்புவது என்பதைவிட, ஏன் நம்புகிறோம் என்பதே இக்கால உள ஆராய்ச்சி முறையில் முதன்மையா யிருக்கிறது.

ஒரு செய்தித்தாள்.

ஒருவரை யொருவர் விரும்புவதன் அடிப்படைக் காரணங் களுள் ஒன்று, இருவரும் மூன்றாவதொரு பேர்வழியை மனமொத்து வெறுப்பதாகும்!

பெர்ட்ராண்டு ரஸ்ஸல்.

46. செல்வம்

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை

எல்லாரும் செய்வர் சிறப்பு.

திருவள்ளுவர்.

பெருஞ் செல்வத்தின் ஒரே பயன் பகுத்துப் பயன் படுத்துவதே. இது தவிர, வேறு உண்மைப் பயன் கிடையாது. மற்றவையெல்லாம் வீணாரவார மட்டுமே.

பேக்கன்.