பக்கம்:அப்பாத்துரையம் 43.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்வாழ்வுக் கட்டுரைகள்

103

குழந்தையின் வளர்ச்சிப் பருவங்கள் உயிர் வளர்ச்சி, மனித நாகரிகம் ஆகியவற்றின் தொடக்கம் முதல் எல்லாப் பருவங்களையும் குறிப்பவை. ஆதலால், அவ்வவற்றுக்குரிய சூழ்நிலைகளையுடைய கதைகளே அவ்வப் பருவத்திற் குகந்தவை. கற்பனைத் தெய்வக் கதைகள் (Fairy tales), விலங்குக் கதைகள் (Animal Stories), நகைச்சுவைக் கதைகள், வீரக்கதைகள், நாட்டுக் கதைகள் என இவை படிப்படியாகப் பிள்ளைகளின் அறிவு

வளர்ச்சிக்கேற்ப அறிவுத் திறம் உடையவை. இக்கதைகள் நேரப்போக்கும் இன்பமும் தருவதுடன், பொது அறிவையும் வளர்க்கின்றன. அதே சமயம் ஒவ்வொரு பருவம் கழியுந்தோறும் அப் பருவத்துக் கதையைப் பிள்ளை வெறுக்கத் தொடங்கு வதனால், புதுவகைக் கதையீயல் ஆர்வமும் தோற்றும். இக்கதைகளைப் பிள்ளைகள் மெய்யென ஏற்கும் பருவம் அக் கதைகளுக்குரிய பருவம். அவற்றை ஐயுற்றுக் கேள்வி கேட்டால், அக்கேள்வி கேட்கும் அறிவுத் திறம் போற்றி, அக்கதையை அறியாச் சிறுபிள்ளைக் கதை என்றுக் கூறி, அவர்கள் வளர்ந்து அவர்கள் அறிவும் வளர்ந்ததை அவர்களே அறியச்செய்ய வேண்டும். அறிவு வளர்ச்சியுற்ற பின்பும் அக் கதையைக் கூறுவதோ, அல்லது அவை உண்மையென்று சாதிப்பதோ, பிள்ளைகளிடம் வளர்ந்துவரும் பகுத்தறிவைக் குலைப்பதாகும். எடுத்துக் காட்டாக மதியம் தேய்ந்து போவதற்குரிய புராணக் கதையை ஆறு ஏழு வயதுப்பெண், அல்லது எட்டு ஒன்பது வயதுப் பையனுக்குக் கூறலாம். அது முடிவதற்குள் அவர்களே அதனை நையாண்டி செய்யத் தொடங்கி விடுவார்கள். அதன்பின் மெல்ல அது வெறுங் கட்டுக்கதை என்று கூறி அதே செய்திப் பற்றிய விஞ்ஞான விளக்கத்தைச் சிறுகச் சிறுகப் படிப்படியாகக் கூறலாம். விலங்குக் கதைகளும் மற்றக் கதைகளும் இது போலவே படிப்படியாக விலக்கப்படவேண்டும்.

பிள்ளைகள் கல்வியில் எழுத்தும் புத்தகமும் கொள்ளும் பங்கைவிட, கைவேலையும் உடல் இயக்கமும் பாட்டும் கதையும் பெரிதாயிருக்க வேண்டு. கூடியமட்டும் கண்ணாற் பார்க்கத்தக்க பொருள், படம் ஆகியவற்றால் அவர்கள் கருத்தை மனத்தில் உருவகப்படுத்த உதவவேண்டும். பிள்ளைப் பருவம் முடிந்து சிறுமைப்போதின் பெரும்பகுதி வரை, கல்வி விளையாட்டுகள் விளையாட்டாகவே இருத்தல் வேண்டும். பன்னிரண்டும்