(254
அப்பாத்துரையம் - 5
மூவரசர் எவ்வளவு பழமையான மரபினரோ அதே அளவு பழமையான தமிழ் மரபுகள்தாம், ஆய் முதலிய வேளிர்களின் மரபுளும் என்பதில் ஐயமில்லை. உண்மையில் மூவரசர்களும் பண்டுவேளிருள் வேளிராயிருந்து தலையோங்கியவர்கள் தாமோ என்று கூறக்கூட இடமுண்டு. மும்மரபினரும் முடியரசரான பின்பும் வேளிர்கள் தனிக்குடியரசாயிருந்து பண்டைக் குடியாட்சிப் பண்பு பேணினர். தமிழையும் தமிழ்க் கலைகளையும் தமிழ்ப் பண்பையும் வளர்ப்பதிலும், வீரத்திலும், கொடையிலும் அவர்கள் மூவரசர்களுடன் போட்டியிட்டனர்; பலகால் அவர்களை நாணவும் வைத்தனர். அவர்கள் மரபின் பெருமையை மூவரசர்கூட உயர்வாக மதித்தனர் என்பதைக் காணலாம்.
னனில், அவர்கள் பிற முடியரசுடன் பெண் கொள்வதினும் வேளிர்களுடன் பெண் கொள்வதையே பெருவழக்கமாகக் கொண்டிருந்தனர். இங்ஙனம் மூவரசருக்கும் முற்பட்டுத் தண்டமிழ்க் குடியரசுப் பண்பு பேணிய வேளிர்களுள் ஒருவனே ஆய்வேள்! அவன் மரபில் வந்தவர்தாம் திருவாங்கூர் மன்னர் என்பது குறிக்கத்தக்கது.
வேளிர் மூவரசருக்குப் பெண் கொடுக்கும் பெருமையுடைய மரபினர். ஆனால், கலைமன்னன் இரவிவர்மாவின் மரபாகிய கிளிமானூர்த் தம்பிரான் குடியோ, திருவாங்கூர் மன்னர் குடியிலிருந்து பெண்கொள்ளும் பெருமையுடையது. தற்போதைய திருவாங்கூர் அரசு பெண்வழி அரசு. எனவே திருவாங்கூர் மன்னராவோரின் தந்தை வழிமரபு இக் கிளிமானூர் மரபேயாகும். கிளிமானூர் மரபுடன் இத்தொடர்பு கொள்வதில் திருவாங்கூர் மன்னர் மிகவும் பெருமை கொண்டிருந்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் உண்ணி கேரள வர்மா மன்னன் காலமுதல் இன்றுவரை அவர்கள் இடையறாது இத்தொடர்பு பேணியுள்ளனர். சென்ற இரண்டு நூற்றாண்டிலும் உள்ள திருவாங்கூர் மன்னர் அனைவரும் தந்தை வழியில் கிளிமானூர் வழிவந்தவர்களே.
கிளிமானூர் மரபினரின் பண்டை இல்லமாகிய ‘தத்தரிக் கோவிலகம்' மலபார் மாவட்டத்திலுள்ள பெய்ப்பூரில் (வைப்பூரில் ) இருந்ததாக அறிகிறோம். இம்மரபின் வடபாலைய வரலாறுபற்றி நமக்கு மிகுதி தெரியவில்லையாயினும், அதுவும்