பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கன்னட நாட்டின் போர்வாள் ஐதரலி

|| 227

செய்தான். கோட்டைக்குள்ளிருந்தவர்களில் பெரும்பாலோர் மராட்டியர் கையில் சித்திரவதைக்கு ஆளானார்கள்.

இச்சமயம் பேஷ்வா மாதவராவ் உடல் நலிவுற்றுப் பூனாவுக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. போரில் இதனால் ஹைதருக்குச் சிறிது ஓய்வு கிட்டியதாகத் தோன்றிற்று. ஆனால், பேஷ்வாவின் தாய்மாமனான திரியம்பகராவ் படைத்தலைமை ஏற்று, போரை முன்னிலும் மும்முரமாக நடத்தினான்.மாதவராவ் கைப்பற்றாத கோட்டைகள் அவன் கைவசமாயின. இவற்றுள் குர்ரம்குண்டாக் கோட்டை முக்கியமானது. தலைமைக் கோட்டையான சீரங்கப்பட்டணத்துக்கும் ஆபத்து நெருங்கி வந்தது.

ஹைதர் தன் முழுப் படைவலிமையையும் திரட்டிச் சீரங்கப்பட்டணத்தை எதிரி அணுகாமல் தடுக்க முற்பட்டான். அக்கோட்டைக்கு இருபது கல் வட திசையில் குன்றுகளின் நடுவில் மேலுக்கோட்டை என்ற திருக்கோவில் இருந்தது.ஹைதர் அதனை அணுகும் கணவாய் ஒன்றை வளைத்துப் பிறைவடிவில் குன்றின்மேல் தன் படைகளை நிறுத்திவைத்தான். ஆனால் அவன் போதாத காலத்துக்கு, அவ்வளைவுக்கு எதிராக இருந்த குன்றை அவன் கவனிக்கவில்லை. அதைப் பீரங்கித் தளமாகப் பயன்படுத்தி மராட்டியர் ஹைதர் படைக்குப் பேரழிவு செய்தனர். ஹைதரிடம் அவ்வளவு ஆற்றல் வாய்ந்த பெரிய பீரங்கிகள் இல்லை. ஆகவே பல மணி நேரம் அழிவைப் பார்த்துக் கொண்டிருந்தும், அவன் செயலற்றிருக்க வேண்டியதாயிற்று.

முன்பகுதியைப் போராடவிட்டுக்கொண்டே, பின்புறமாகத் தன் படைகளை இரவோடிரவாகச் சீரங்கப்பட்டணம் கோட்டைக்குப் பின்வாங்கிச் செல்லும்படி ஹைதர் கட்டளையிட்டான். ஆனால், வழியில் ஒரு துப்பாக்கி தற்செயலாக வெடித்ததனால், இரகசியம் எதிரிகளுக்குத் தெரிந்து விட்டது. வழியில் முத்தேரி, என்ற ஓர் ஏரிக்கரையில் எதிரிகளின் பீரங்கிகள் இருந்தன. இப்பீரங்கிகள் ஒரு புறமும், பின் தொடரும் மராட்டியப் படை ஒரு புறமும் முத்தேரியைக் கூற்றுவன் களமாக்கிற்று. படைகள் சீரங்கப்பட்டணத்துக்கு ஐந்துகல் வடக்கிலுள்ள சர்க் கூலி மலையை அணுகியதும் மாராட்டியக் குதிரைப் ப படையினர் ஹைதர் படைகளைத் தாக்கினர். அணிகள்