பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கன்னட நாட்டின் போர்வாள் ஐதரலி

|| 255

ஷாஜகான் சமரசத்தையும் போற்றும் ஆங்கில வரலாற்று ஆசிரியர் தெரிந்தோ, தெரியாமலோ ஹைதரைச் சமயத் துறையில் அசட்டையாளன் எனக் குறிப்பிடுகின்றனர். இது தவறு என்பதைக் கீழ்வரும் செய்திகளும், ஹைதர் வாய் மொழிகளும் காட்டும்.

தசராக் கொண்டாடுவது பற்றியும், சைவ வைணவக் கோயில் மானியங்களைக் குறைக்கவாவது செய்யாமல் வழங்குவது பற்றியும் இஸ்லாமியத் தலைவர் குறைப்பட்டனர். து சமயப் பகைமைச் செயலாகும் என்றனர். "சமயப் பகைவர்க்கு உதவுவதும் நலம் செய்வதும் சமயப் பகைமை ஆகமாட்டாது. நபிகள் நாயகம் அது செய்தால்தான் நாம் முஸ்லீம்களாயிருக்கிறோம்” என்று விளக்கம் தந்தான் ஹைதர்.

இயேசுபிரானிடம் சமயப் பிற்போக்கராகிய புரோகிதர் குறுக்குக் கேள்வி கேட்டபோது, இயேசுபிரான் கூறிய நகைச்சுவையும் பண்பும் வாய்ந்த விளக்கங்கள் பல. ஹைதரிடம் இஸ்லாமிய சமயத் தலைவர், கட்சி எதிர்க்கட்சியாளர் எழுப்பிய கேள்விகளுக்கு. அவன் தந்த விடை விளக்கங்கள் இயேசுபிரான் விளக்கங்களின் அருகே வைக்கத் தக்க சிறப்புடையவை ஆகும்.

ஒரு நாள் வாய்ச் சண்டையிலிருந்து கைச்சண்டைக்கு முதிர்ந்துவிட்ட ஒரு சமயப் பூசல் ஹைதரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. முஸ்லிம்களிடையேயுள்ள ஷியா, ஸுனீ வகுப்பினரிடையே நிகழ்ந்த வாதம் அது. முகமது நபிக்குப் பின் சமயத் தலைமை தாங்கிய குரவர்களில் ஷியாக்கள் சிலரைப் பூசித்தனர். சிலரைக் குறை கூறினர். குறை கூறப்பட்டவர்களே ஸுனீகளால் பூசிக்கப்பட்டவர்களாதலால், சண்டை வளர்ந்தது. ஹைதர் இரு தரப்பாரையும் அழைத்து அவரவர் வாதங்களைக் கேட்டான்.

"அரசே! நம் சமயக் குரவரைப் பற்றி இந்த ஷியாத் தலைவர்கள் தூற்றுகின்றனர். அதை எங்ஙனம் பொறுப்போம்?" என்றனர் ஸுனீத் தலைவர்கள்.

“அரசே! சமயக் குரவர் என்று அவர்கள் போற்றுபவர்கள் இன்னின்ன தீமையைச் செய்தார்கள் என்று காட்டித்தானே குறை கூறுகிறோம். தீமை செய்யவில்லை என்று அவர்கள்