பக்கம்:அமர வேதனை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நினைப்பு

சிடு சிடுக்கும்

சீற்றம் காட்டும்

சீரியஸ் முகமும்

சிந்தனை போஸும்

சதா கொண்டிடும்

சிற்சில பேரைக்

காணும் போதெல்லாம்

சிறுபிள்ளையாய்

இவரும் இருந்ததில்லையோ

என்றே என்னுளம்

எண்ணும்.


எட்டாக் கனவுகள்

ஏக்கம் கவலைகள்

திட்டம் குழப்பம் பலவும்

மண்டும் உளத்தராய்,

உர்ரெனு முகத்தராய்,

எப்பவும் தோன்றும்

சிலபேர் என்றுமே

சிறு பிள்ளையாய்

இருந்திலர் போலும்

என்றொரு நினைப்பு

என்னுளம் மேவும்.


கவலைகள்

தோன்றா உள்ளம்,


அமர வேதனை
28
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமர_வேதனை.pdf/30&oldid=1192916" இலிருந்து மீள்விக்கப்பட்டது