பக்கம்:அமல நாதன்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 அமில காதன்

யுள்ள இடத்தையும் நன்கு கவனித்தான். கீழ்வரு மாறு போருக்குத் திட்டம் வகுத்தான்.

வட்ட அறையின் இரு கதவுகளில் ஒன்றை மூடி விட வேண்டுமென்றும், திறந்து ல்ைக்கப்பட்டி ஒரு கதவருகில் வாமனன் இருக்க வேண்டும் என்றும், சன்னல்கள் யாவும் சர்த்தப்பட்டு இருக்கவேண்டு மென்றும், அப்படையறை தம் பாதுகாப்பில் இருப் பதால் எதிரிகள் அவ்வறையினின்று எந்தப் படை யையும் தம்மை அறியாது எடுத்துப் பயன்படுத்த இயலாது என்றும், தன்னிடம் உள்ள கைத் துப்பாக் கியைக் கொண்டும் தானும் அமல நாதனும் கப்பற் றஃலவனுக்கும் முனியனுக்கும் உரிய துப்பாக்கியைக் கொண்டும் எதிரிகள் வருவதை அறிந்த மாத்திரத்தில் சுட்டுவிடவேண்டும் என்றும் வாமனன் அமலநாதி லுக்கு அறிவித்தான்.

இருவரும் தாம் பேசி முடிவு கட்டியபடி எதிரி. களைத் தாக்குவதற்கு எச்சரிக்கையுடன் இருந்தனர். வாமனன் தன் கையில் துப்பாக்கியுடன் அறையின் வெளியே நின்று கொண்டிருந்தான். அமல நாதன் அடுத்த அறையில் அகாவது மூடப்பட்ட அறையில் ஒளிந்திருந்தான். அந்த அறையில் சூரிய ஒளி வரு தற்கென வைக்கப்பட்ட துவாரமும் கன்கு மூடப்பட் டிருந்தது. அஃது அவ்வாறு மூடப்படாமல் இருப்பின் எதிரிகள் உள்ளே குதித்து வரக்கூடும் என்பதை முன் கூட்டிச் சிந்தித்து அத் துவாாமும் அடைக்கப்பட்டது.

இரு திறத்தாரின் சதியாலோசனைகள் அன்று இரவே உருக் கொள்ளலாயின. கப்ப ற்குழுவினர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமல_நாதன்.pdf/41&oldid=687704" இலிருந்து மீள்விக்கப்பட்டது