பக்கம்:அமிர்தம்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

* தட்டு வட்டி ’க்குக் கிடைத்த சொக்கத்துடன் புறப்படும் அவன், மீண்டும் வீடு வரும் சமயம் இருட்டிப் போகும். பத்து, பன்னிண்ரடு ரூபாய்க்கு அரிசி வாங்குவான். வீடு வந்ததும் அரிசி பூசாவும் காலியாகிவிடும். கண் முன்ன லேயே லாபம் மூன்று, நான்கு ரூபாய் சர்வ நிச்சயம் கிடைக்கும். ஆக இந்தத் , தொழில் பட்டப் பகவில் ‘கறுப்பு மார்க்கட்’முத்திசையுடன்-நடந்தது.

காற்று என்றென்றும் ஒரே திக்கில்தான் வீசும் என்பது என்ன நிச்சயம் ?

அப்பொழுது ரேஷன் ரொம்பவும் ‘கெடுபிடி‘யாக இருந்தது. அன்று வழக்கம்போல அரிசி மூட்டையைச் சுமக்க முடியாமல் சுமந்து வருகையில், எதிரே சைக்கிளில் வந்து கின்ற ரேஷன் அதிகாரியைக் கண்ட மாணிக்கத் திற்கு சத்தம் முழுதும் அப்படியே உறைந்துவிட்டது போன்ற பிரமை எழுந்தது. அவருடன் வந்திறங்கிய அந்தச் செட்டியாாரைக் கண்டதும், மாணிக்கத்திற்கு விஷயம் விளங்கிவிட்டது. செட்டியாருக்கு அவன் மீது பல நாளாக ஒரு ‘கண்’ உண்டு. அவர்தான் அவ்வூர் ரேஷன் கடைக்காரர். பின்னர் கேட்பானேன்? ரகசியமாக அரிசி வியாபாரம் நடப்பது பற்றிய ‘துப்பு’ அவர் வாயிலாக அதிகாரிகளுக்கு எட்டியது. அதன் பலன் மாணிக்கத் தின் தலையில் விடிந்தது. . .

மாணிக்கம் செய்த கள்ள வியாபாசம் நிரூபிக்கப்பட்டது. அதன் பலகை அவனுக்கு ஒரு வருஷம் சிறைக் தண்டனை கிடைத்தது. கையுங் களவுமாக அவன் பிடி பட்ட தருணம், அந்தச் செட்டியாரைப் பார்த்தான். அப் பார்வையில்தான் எவ்வளவு கொடுரம், ஏக்கம், சஞ்சலம் பிரதிபலித்தது!

கணவன் கைதியாகிய ‘சேதி’ அறிந்து புலம்பினுள் காவேரி, கைக்குழந்தையுடன் எப்படிக் காலந்தள்ள முடியுமோ என்று எண்ணிப் பார்த்த அவளுக்கு ஆத்திரம் பொங்கியது; அழுகை பீறிட்டது. அன்றைக்குத் தன்19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/21&oldid=1194090" இலிருந்து மீள்விக்கப்பட்டது