பக்கம்:அமிர்தம்.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குரு தட்சிணையாம்; கல்யாணப் பரிசாம். படிப்புமட்டுமல்ல; அழகாகப் பேசவும் கற்றுக்கொண்டு விட்டாள்.”

“அம்மா, உண்மையில் இரண்டு பேருமே உங்க ளுக்குக் கடப்பாடுடையோம்.”

வீரப்பன் பட்டணத்தில் இருந்தவண்ணம், எப்படியும் வடிவழகியைத் தாண்டி அவளுக்கு எழுதப்படிக்கக் கற்றுக் கொடுத்துவிடவேண்டும் என்பதாகப் பிரார்த்தித்து, அதே வாத்தியாரம்மாவிற்கு அடிக்கடி தபால் எழுதிய ரகசியம். வடிவிற்கு நாளது தேதிவரை தெரியவே திெரியாதாம்!

முக்குச் சப்தம் கேட்டது. பொங்கலுக்கு மச்சான் எடுத்துவந்த புடவை காற்றில் சலசலக்க வடிவழகி புது மணப் பெண்போல நின்றிருந்தாள். வாசலில் ‘கசமுச’ வென்ற பேச்சொலி கேட்டு அவள் மெல்ல அடியெடுத்து வைததாள.

“ஆமா, தம்பி. காவு கொடுக்கிறார்களாமே, காவு. பாவம், வாய்பேசத் தெரியாத ஆடு கோழிகளைத்தான காளி ஆத்தா கேட்கிறாள் எல்லாம் சாமி பேசைச்சொல்லிக் கோயில்காரங்க ஏமாத்தற பொழைப்பு. சாயந்திரம் எப்படியும் பலிகொடுக்கிற வழக்கத்தை நிப்பாட்டனும் இல்லாட்டி என் தலையையே அந்தக் காளிக்கு......”

உணர்ச்சி கொப்பளிக்க வீசப்பன் பேசியதைக் காது கொடுத்துக் கேட்ட வடிவழகிக்கு உடல் வியர்த்துக் கொட்டியது.

அவளுக்குப் பேச்சின் சாராம்சம் புரிந்தது. பலி கொடுக்கும் சம்பவத்தை மாற்றவேண்டும் என்பது அத்தானின் குறிக்கோள் என்பதையும் உணர்ந்தாள். ஆனால் எப்படி இது சாத்தியம்? கோவில் உடமைக்காரர்கள் ஊரில் பெரும் புள்ளிகளாயிற்றே! ‘இல்லாட்டி என் தலையையே அந்தக் காளிக்கு...’ என்று சபதம் செய்த தன் மச்சானின் பேச்சில் தொனித்த உறுதியை எண்ணிப்பார்த்த

35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/37&oldid=1322918" இலிருந்து மீள்விக்கப்பட்டது