பக்கம்:அமிர்தம்.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

களில் இருவரும் சந்தித்துப் பேசும் சமயங்களில் ஏற்பட்ட லளிதமும் வேடிக்கையும் தற்சமயம் அவன் பேச்சில் தலைகாட்டவில்லை. ஏதாவது பேசியாக வேண்டுமே என்ற நிர்ப்பந்தத்துக்கு உட்பட்டவனைப்போல ஏதோ கேள்வி பொன்றைக் கேட்டு வைத்தான். ஆனால் அவன் இதய அந்தரங்கத்தில் புதைந்து கிடந்த துயரம் மீண்டும் புத்துயிர் பெறும்படி தான் செய்துவிட்டதைப் பொன்னருவி அறிவாளா? அறிந்துதான் அவளால் என்ன ஆகப்போகிறது?

பரிதாபமாகத் தன்னைப் பார்த்து நின்ற பொன் அருவியை நிமிர்ந்து நோக்கினான். வசந்த மல்லிகையைப் போல, சுண்டிவிட்டால் சத்தம் தெறிக்கும்படியான பூரண யௌவனப் பொலிவுடன் இருந்த பொன்னருவியா இப்படி எலும்பும் தோலுமாக உருமாறிப் போய்விட்டாள்? அவள் முகத்தில் சஞ்சலம் பிரதிபலித்தது. ஆச்சரியப்பட்ட அவன் அனுதாபப்பட்டான். தங்கவேலின் மனம் தறிகெட்டுச் சுழல ஆரம்பித்தது.

பொன்னருவி! ஆம்; அவள் அவனுடைய முறைப் பெண். அன்று மட்டும் அவள் அப்பா அப்படி விடாக் கண்டனாகத் தங்கவேலின் குடும்பத்தாரோடு குஸ்திக்குக் கிளம்பியிராமல் இருந்திருந்தால், கட்டாயம் அவள் அவனது ‘ஆசைக் கண்ணாட்டி’ யாகவேதான் ஆகியிருப்பாள். ஆனால் அவர்கள் இரண்டு பேருடைய துரதிர்ஷ்டம் அந்தப் பந்தம் அறுந்துவிட்டது. நல்லது, கெட்டது எந்தக் காரியத்துக்கும் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்வதில்லை. ஒட்டுறவு துண்டிக்கப்பட்டது.

“அத்தான்!”

“பொன்னருவி!”

“உங்களைக் காணத்தான் வீடு வரைக்கும் போயிட்டு வாரேன்”

“என்ன சேதி?”

‘அத்தான், என் கைக்குழந்தைக்குக் கபவாத ஜுரம். நாலஞ்சு நாளாக் காய்ச்சல், வைத்தியத்துக்கு

48

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமிர்தம்.pdf/50&oldid=1313514" இலிருந்து மீள்விக்கப்பட்டது