பக்கம்:அமுதவல்லி.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138 அமுதவல்லி

செய்தன. துகையல் தயாரானது. வடி தண்ணிர் கல்சட்டியில்; மிஞ்சிய கஞ்சி பானையில்; எஞ்சியது மண்ணுக்கு.

மேலவளவுத் தொங்கலிலிருந்து தவழ்ந்து வந்த சினிமாப்பாட்டுக் களின் ஒலி, செல்லாயியின் நெஞ்சைத் தொட்டது. பசி வயிற்றைக் கிள்ளியெடுத்தது. வாரிச் சுருட்டிக் கொண்டு மெல்ல எழுந்தாள்; மெல்ல நடந்தாள்; மனம் அல்லாடியது; உடல் தள்ளாடியது. குருவி மணலைப் பிரிமனையாக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர்த் திவலை, அவளுக்குத் தான் பணிந்தது. திரும்பி நடந்தாள்: குடிசைவந்தது; குனிந்து தான் நுழைந்தாள் ; இருந்தும் தலையை இடித்துத் தொலைத் தது. எண் சாண் உடம்பிற்கு எட்டடிக் குச்சுக்குமேல் தேவை ஏது? அங்காளம்மன் திருநாளில் பெரியட்டான் புரத்து மண்டகப்படி பன்றைக்கு குருக்கள் ஐயர் தந்த விபூதிப் பிரசாதம் காட்சியளித்தது. முதலில் எடுத்து அதை வாய்க்கும், அடுத்து அள்ளியதை நெற்றி மேட்டுக்கும் பகிர்ந்து கொண்டாள் அவள். கிழக்குப் பாரிசத்தில் பதித் திருந்த கண்ணாடித் துண்டொன்று, அவளை அழைத்தது. வதனம் பதித்தாள் கிழவி. சுருக்கம் விழுந்து தொங்கிய முகமும், குழி பறித்துக் கிடந்த கண்களும், நரை திரண்ட கேசமும், ஒட்டிய வயிறும், உலர்ந்த உடலும் அப்போது அவ்ளது பார்வையில் தட்டுப்படவில்லை. கடந்து வந்த நெருஞ்சிமுள் காடு தெரிந்தது; தாண்டி வந்த அறுபத்தேழு மைல் கற்கள் காணக்கிடந்தன: தாம்பூலம் மாற்றி, பரிசம் போட்டு, தாலி பூட்டிய அவள் துணைவன் உடல், பொருள், ஆவி முன்றையும் கொடுப்பதாகக் கையடித்துக் கொடுத்துவிட்டுக் கடைசியில் ஒர் இரவிலே அவளிடம் சொல்லிக் கொள்ளாமல் உடல், பொருள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/140&oldid=1376574" இலிருந்து மீள்விக்கப்பட்டது