பக்கம்:அமுதவல்லி.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் ‌‌149 __________________________________

ணாகிப் போன கந்தசாமி அண்ணாச்சிக்கு பாட்டி கிட்டேயிருந்து நல்ல பேர் வாங்கிக் கொடுத்திட்டேன்! ... கிழவிக்குத் தான் எவ்வளவு தங்கமான மனசும் ...இட்டவங்களுக்கு இட்ட பலன்!...என் சொந்தப் பணம் இருபத்தேழு ரூபாய் நஷ்டமானால் என்ன?... என் பேச்சைத் தட்டாமல் எங்க வீட்டிலேயே பாட்டி தங்கியிருக்கிறது எனக்கு என்ன மோ மனசுக்கு ரொம்ப நிம்மதியாகத் தான் இருக்குது: ம்... என் கல்யாணச் சாப்பாடு சாப்பிட்டாத் தான் அதுக்கு நிம்மதி வருமாம்! எல்லாம் காளி அம்மன் கருணை தான் !..."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/151&oldid=1378525" இலிருந்து மீள்விக்கப்பட்டது