பக்கம்:அமுதவல்லி.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறு முகம் 177

முகுந்தனுக்குச் சிந்திக்கத் தெரியாது; அதற்கு அவசியமும் கிடையாது. அவன் அப்படி; அவனுடைய வேலை அப்படி மாதா மாதம் தலைவலி மருந்துச் செலவு மிச்சம் தான். அப்படித் தான் அவன் எண்ணியிருந்தான். பின் எப்படி இந்த எண்ண அலைகள் பிறக்கின்றன? ஏன் பிறக்கின்றன? அவனுக்கு மண்டை ஓடு சூடேறி விட்டது.

மேஜை மீதிருந்த கண்ணாடித் தூண்டில் அவன் முகம் துலாம்பரமாகத் தெரிந்தது. 'டை'யைச் சரி செய்து கொண்டான். பைல் ஒன்று அவன் கையில் இருந்தது. புறப்பட்டான்.

“தாரா"

"....."

"தாரா"

மெல்லிய அழுகைச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது-பெண்!யார் அது?-ஹேமாவா? பூமாவா? அல்லது தாராவே தானா?

மங்கையருக்கு இந்தக் கண்ணீர் தானாமே பொறுமையைப் போதிக்கிறதாம்-உங்களுக்குத் தெரியுமா?

"தாரா!"

அழைப்பு தூது சென்றது; அழைத்தவன் தூது சென்றான்.

தாராவின் கருவண்டுக் கண்களிலே கண்ணீர்த் துளிகள் சிரித்தன. சிரித்தனவா? சிந்தித்தன - சிந்திக்க வைத்தன-அவளையல்ல- அவனை. அவனுக்குச் சிந்திக்க வேண்டிய தலையெழுத்து இல்லை என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/179&oldid=1378344" இலிருந்து மீள்விக்கப்பட்டது