பக்கம்:அமுதவல்லி.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 193


   பிரித்து வைத்திருந்த மலரின் ஏடுகள் அவன் கண் முன் ஓடின. அவன் கண்கள் மலரின் ஏடுகளிலே ஒட வேண்டாமா?
   ஒரு காக்காய் குருவிகூட அவனுக்குச் சக பிரயாணியாக்-சக பிராணியாக இல்லை. பண வீக்கம் என்று எழுதட்டுமா? பண முடக்கம் என்றே புரியும் படி எழுதிவிடலாமா? இல்லை, மேலை  நாகரிகம் மெளஸ் இழந்து வருகிறதென்று அர்த்தமா?-ஏதோ ஒன்று. தொலையட்டும் , சனியன்!
   ஹோல்டாலில் பதிந்திருந்த கை கடுத்தது தலையை உயர்த்திக் கொண்டான். காற்று தேவைப் படவில்லை. அணைத்தான்.
   “அன்புள்ள அத்தான் அவர்களின் பாதார விந்தங்களுக்கு அனந்தகோடி நமஸ்காரம். என் உடம்பு முழுவதும் தேறிவிட்டது. இந்த முப்பது நாட்களும் முப்பது யுகங்களாகி விட்டன. உங்கள் அன்பு நிழலில் தான் நான் உள்ளம் தேறுவேன். என்றைக்குத் தஞ்சை வருவீர்கள்? சீக்கிரம், அத்தான், சீக்கிரம்!
                   இப்படிக்கு, 
                 
                  உங்கள்அடியாள்
                     
                      வாணி 


    பி.கு.:-நினைவிருக்கட்டும்- அகநானூறு. 
   சிரிப்பினுள் சிந்தை ஒடுங்கினான். சித்தனல்லமுகுந்தன்! தூக்கம் சொக்கியது. காற்று சுழன்றடித்தது; விம்மி வெடித்தது. தூங்கிப் போனவன் கண் மலர்ந்தான்.
   அழகு கொலு வீற்றிருந்தது. வெறுமைக்குப் பிரியா விடை. திரும்பினான். அழகு ரோஜா ஒன்று
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/195&oldid=1377813" இலிருந்து மீள்விக்கப்பட்டது