இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
60 அமுதவல்லி
தைக்கப்போது போட்டுச் சேமிச்சு வைத் திருந்தது தான் இம்புட்டுப் பணமும்! நல்ல சமயத்திலே தெய்வம் கணக்கிலே வந்து அந்த உண்டியல் கலயத்தைக் காட்டிக் கொடுத்திட்டுதுங்க நம்பளோட அருமை வெள்ளை!..." மனம் கொள்ளாமல் பேசினாள் மீனாட்சி.
“ஓஹோ அப்படியா சமாச்சாரம்?...ம்... ஆத்தா!” வாய் கொள்ளாமல் சிரித்தான் சுப்பையா.
“அத்தான், கொஞ்ச முந்தி இந்த அதிசயக் கூத்து நடந்திருந்தால், நீங்க செப்பின மாதிரியே, தேசப் பாதுகாப்பு நிதிக்குக் கை நிரம்ப அள்ளிக் கொடுத் திருக்கலாமுங்களே?”
"வாஸ்தவம் தான். மீனாட்சி!"
குழந்தைகளுக்கு இனிமேல் தேவையானது கதையல்ல!...