பக்கம்:அமுதவல்லி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

 முதற் பரிசுகளை வழங்கினார். இரண்டு முதற் பரிசுகளை வென்ற நூல்களில் ஒன்று தான், ‘தெய்வம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது!’ என்னும் சிறு கதைத் தொகுப்பு ஆகும்.

இதனை அடுத்து எனது நிதர்சனங்கள் என்ற சிறு கதைத் தொகுப்பு ஒன்றையும் அதனைத் தொடர்ந்து, தற்போது தங்கள் கைகளில் தவழும் ‘அமுதவல்லி’ என்ற இந்தச் சிறு கதைத் தொகுப்பு நூலையும் வெளியிட்டு உதவிய துரை. இராமு பதிப்பகத்தின் உடைமையாளர் திருமிகு துரை. இராமு அவர்கள் எனக்குக் கிடைத்த சடையப்ப வள்ளல் ஆவார். அன்னாருக்குத் தலைவணங்கி நன்றி கூறுகிறேன்.

அன்புடன்
பூவை எஸ். ஆறுமுகம்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/8&oldid=1027316" இலிருந்து மீள்விக்கப்பட்டது