இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
88
அம்புலிப் பயணம்
தொலைக்காட்சிச் சாதனங்கள் உள்ள இல்லங்கள் தோறும் தெரிந்தன; அவற்றை மக்கள் கண்டு மகிழ்ந்தனர். இதற்கு ஓவிபரப்புச் சாதனங்களுடன் உலகினைச் சுற்றி வந்து கொண்டிருக்கும் செயற்கைத் துணைக்கோள்கள் கைகொடுத்து உதவின.
அம்புலித் தரையில் வைத்த நினைவுக் குறிப்புப் பலகையைக் காட்டுவது
விண்வெளி வீரர்கள் இருவரும் நிலவுலகிற்குத் திரும்புகையில். அம்புலியில் நினைவுக் குறிப்பாக ஒரு பலகையை வைத்து விட்டுத் திரும்பினர். அதில்
அம்புலிமேல் முதலில் அடி வேத்தனர்.
கி. பி. 1969 சூலை.
மக்கள் குலம் முழுவதற்கும் அமைதி காண வந்தோம்.“