பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உங்கள் சோகத்தைப் பார்த்தால், நல்ல செய்தி கொண்டு வந்திருப்பதாய்த் தெரியவில்லையே! எதுவாயிருந்தால் என்ன! இந்தாருங்கள், இதைத் தயவு செய்து அருதுங்கள்!

(கிண்ணத்தை அவரிடம் நீட்டுகிறாள்.)

சந்நியாசி : (அருகில் நெருங்கி) தாகம் அதிகம்தான்; ஆயினும் நீ ஒரு வாக்குறுதி கொடுத்தால்தான்-

ஹெட்விக்: அருகில் வராமல், எட்டி நின்றே சொல்லுங்கள்

சந்நியாசி: வந்தவர்களுக்கு உணவளிக்கும் அந்த நெருப்பின் மீது ஆணை-இந்தச் செல்வக் குழந்தைகள் மீது-

ஹெட்விக்: சரிதான், சரிதான்! உடைதான் சந்நியாசி உடை-நீங்கள் துறவியே அல்ல! ஏதோ துக்கத்தால் வேஷம் போட்டிருக்கிறீர்கள் !

சந்நியாசி: மனித குலத்திலேயே மகா துக்கமுடையவன் நான்!

ஹெட்விக்: துக்கம் தெரிகிறது; ஆனால் உங்கள் பார்வை பயங்கரமாயிருக்கிறதே!

சிறிய வால்டர் : (துள்ளியெழுந்து) அம்மா, அதோ அப்பா (வெளியே ஒடுகிறான்.)

ஹெட்விக்: (கூடப் போகத் தயங்கி நின்று)-தெய்வமே!

வில்லியம் : நம்முடைய அப்பா!

சிறிய வால்டர்: அப்பா, மீண்டு வந்துவிட்டீர்களா, அப்பா

வில்லியம் : செல்ல அப்பா! முத்து அப்பா !

டெல்: ஆமாம், ஆமாம்! வந்துவிட்டேன்! அம்மா எங்கே?

சிறிய வால்டர்: அதோ கதவடியில் நிற்கிறாள். அம்மாவுக்கு ஒரு பக்கம் பயம், ஒரு பக்கம் சந்தோஷம்! மனசு எப்படியிருக்கும், அப்பா!

டெல்: ஓகோ, அப்படியா! ஹெட்விக்! இனி கவலைப் படாதே பெற்ற தாயிடமிருந்து பிள்ளைகளைப் பிரிப்பவர்கள் ஒழிந்தார்கள்!