பக்கம்:அம்பு எய்த பழம்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 ருவோடி புளுவெல்லன் துறையில் ஏறித் தாமும் கூ வந்தாராம்ே ? எப்படித் தப்பி வந்தாய் ? முதலில் அதை சொல்லு. டெல் : படகில் சங்கிலிகளால் பிணித்து என்னை ஓர் ஒர; திலே கிடத்தியிருந்தார்கள். கண்கள் இருண்டு, மனமு: இருண்டு கிடந்தேன். வீடு, வாசல், பெண்டு, பிள்ளைகள் யாரையும், எதையும் இனிப் பார்க்க முடியாதே என் ஏக்கம் ஒரு புறம் ! ஒளி அறியாத எந்த இருட்டறையில் தள்ளுவார்களோ என்ற துக்கம் ஒருபுறம் ! ஏரி நீரைே பார்த்துக் கொண்டிருந்தேன் : ருவோடி : எவ்வளவு கஷ்டம் ! டெல் : ஒடம் வந்துகொண்டிருந்தது ; எங்கிருந்தே புயலும் வந்துவிட்டது! சூறைக் காற்றிலே இறகு பறப்பதுபோல், ஏரிமீது படகு பறந்து கொண்டிருந்தது என்னென்னவோ செய்து பார்த்தார்கள், எதுவும் பலிக் வில்லை. கவர்னர், படகோட்டிகள், சிப்பாய்கள் எல்லாரு ஒய்ந்து அயர்ந்து கிடந்தார்கள். தங்களுக் கெல்லா பூமியிலே சமாதியில்லை என்றும், தாங்கள் நீரிலேயே வாய பிளந்து மிதக்க வேண்டியதுதான் என்றும் கவலைப்பட்டு கதறினர்கள். கடைசியாகக் கவர்னரின் ஆட்களில் ஒருவன் "டெல் ஒருவனே இந்த நேரத்தில் ஒடத்தைக் காக்க முடியும் என்ருன். கவர்னரும் இசைந்து, என் கட்டுக்களை அவிழ்த்து விடச் சொன்னர், புயலிலிருந்து எங்களைக் காப்பாயா! என்று என்ன்ை வேண்டினர். சரி யென்று சுங்கானை: கையிலே பிடித்து ஓடத்தைத் திருப்பினேன். மலைபோல் எழுந்த அலைகளின் மீது படகு ஏறி ஏறி இறங்கிற்று டுப்பைப் பிடித்து ஒரு மாதிரியாகச் சம்ாளித்து காண்டு, எந்தப் பாறை முதலில் கண்ணில் படுகிறதே அதிலே குதித்துத் தப்பிக்கொள்ள வேண்டுமென்று கவனித்துக்கொண்டே வந்தேன். கடவுளைத் தொழுதேன் கடைசியாக ஒரு பெரிய பாறை தென்பட்டது! ருவோடி : எனக்கு அதை நன்ருகத் தெரியும். செங்குத்தான் பாறை; ஆக்ஸ்ென்பர்கின் அடிவாரத்தில் இருப்பது ! டெல் : ஆமாம். அதை நெருங்குகையில், எல்லோரையும் ஊக்கமாகத் துடுப்புக்கள் போடச் செய்தேன். தூரத்தில்