பக்கம்:அம்மையப்பன்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

வேதாளம்: ஸ்வாமிகளுக்கு காணிக்கைகள் வந்திருக்கிறது நிறைய. அதை எடுத்து வந்தேன்...

மாய்கை : காணிக்கை...வாழ்க பக்தர்கள்! எவ்வளவு வேதாளம்.

வேதாளம்: கணக்கற்ற பொன் நாணயங்கள்.

மாய்கை: சந்தோஷம்! அதோ இருக்கிறது உண்டியல்.

[வேதாளம் போதல்]

பூபதி : சாமிகள் பொன்னைத்தொடுவது கிடையாதோ

சாமி: விஷம் — விஷம்!!......

பூபதி: அந்த விஷத்திலே வளருவது தானே இந்த விருக்ஷம்!... சாமியாரே! வெளிநாடு சென்று திரும்பியிருக்கும் எனக்கு நீர் ஓர் வெகுமதி தரவேண்டும்——தருவீரா?

சாமி: வெகுமதியா? என்ன பூபதி.

பூபதி: அந்த புதையலை என் கண்ணிலே காட்ட வேண்டும்.

சாமி: புதையல்?

பூபதி: பொன்னோ வைரமோ அல்ல சாமியாரே... உம்மிடம் புதைந்து கிடக்கும் அந்த ரககியத்தைத்தான் கேட்கிறேன்...

சாமி : ரகசியம்!

பூபதி: ஆமாம் இப்போதாவது சொல்லக் கூடாதா?

சாமி: உயிரை வாங்காதீர்; இருபது வருடமாய் போய் இருந்தீரே இப்போது இங்கு ஏனய்யா வந்தீர்...?

பூபதி : ஏன் வந்தேனா—சொல்கிறேன், நீரும் இருபது ஆண்டுகளாகத்தான் அந்த ரகசியத்தை மறைத்துக் கொண்டு வாழ்கிறீர்! ஹ—ஹ—ஹ—சாமியாரே குதிரை தன் ஆகாரத்தை கோணியிலே மறைத்துக் கொண்டு சாப் பிட்டாலும் அது கொள் என்று தெரியாமலா போய் விடுகிறது. ஹ-ஹ-ஹ!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/12&oldid=1770681" இலிருந்து மீள்விக்கப்பட்டது