பக்கம்:அம்மையப்பன்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13

சுக : ஆமாம்... ஆமாம் அசோகவனத்தில் சீதையிடம் போனவர்...

சரி... சரி...வா

(வாள் வீச ஆரம்பிக்கின்றனர்; முத்தன் கொஞ்சம் வேகமாகச் சுழற்ற.....)

ம்... இவருகிட்டயா நடக்கும்.

(மீண்டும் சண்டை)

ஏய்... இரு... இரு எங்காவது படாத இடத்தில் பட்டு உயிர் போய்விடப் போகிறது... கொண்டா அதை...

[அவனே போய் நீண்ட வாள் ஒன்றும் கட்டாரி ஒன்றும் எடுத்து வருகிறான் அங்கு நிற்கும் வீரனைப் பார்த்து.]

சுக : டேய்... நீ போ,

(முத்தனிடம்)

இந்தா... இதைப்பிடி... இப்போது பார்ப்போம் யார் ஜெயிப்பது என்று...

முத்: இருங்கள் இது போர் செய்யும் இலக்கணமே அல்ல.....

சுக: இலக்கணமே எனக்குத் தேவை இல்லை.

(முத்தன் மீது வாளை வீச, அது பட்டு விடுகிறது. இதை கவனித்த பூங்காவனம் ஓடி வருகிறாள்......)

பூங்: சுகதேவ்!... ... என்ன இது விபரீதமான விளையாட்டு.

சுக : கத்தி விளையாட்டு. நீ ஏன் அத்தை இதில் தலை யிடுகிறாய்! முத்தா! காயத்துக்கு மருந்து போடு வருகிறேன்.

[சுகதேவ்போகிறான் உடனே பூங்காவனம் துணியைக் கிழித்து கட்டுகிறாள்...]

(திகிலுடன்) முத்: இளையராணி...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/15&oldid=1771084" இலிருந்து மீள்விக்கப்பட்டது