பக்கம்:அம்மையப்பன்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16


[முத்தன் - முத்தாயி - காதல் கீதம் பாட்டு முடியும் தருவாயில் சுமதி தன் இடையில் இருபுறங்களிலும் இரண்டு குடம் தண் ணீருடன் வருகிறாள். குடங்களை தூரத்தில் வைத்துவிட்டு முத்தன், முத்தாயி இருவரையும் பார்த்து தன் இரு கண்களையும் பொத்திக் கொண்டு அவர் களிடம் வந்து]


சுமதி: முத்தாயி! போகலாமா?

முத்தாயி: என்ன சுமதி! கண்ணை மூடிக்கொண்டாய்?

[கண்ணைத் திறந்து கொண்டு]

சுமதி: கார்யமாகத்தான். நேரமாகிறது. வா போகலாம்

முத்தாயி: போய் வரட்டுமா?

சுமதி: அந்த உத்திரவுமட்டும் அங்கே கிடைக்காது.

முத்தாயி: ஏது உன் தோழி பெரிய கைகாரிதான் போலிருக்கு.

சுமதி: கைகாரி மட்டுமல்ல-கால்காரி - சுழுத்துக்காரி- தலைகாரி.

முத்தன்: போதும்! போதும்! நீ வேறு காரி காரி முகத்திலே துப்பாதே.

முத்தாயி: சரி! நான் வருகிறேன். ஏ சுமதி! கொஞ்சம் அந்தப் பக்கம் திரும்பிக் கொள். இதோ வந்து விடுகிறேன்.

[சுமதி திரும்பி நிற்க, “இச்” என்ற ஒரு ஒலி சுமதியின் முகத்தில் எதிரொலிக்கிறது]

திருசங்கு வீட்டின் கொல்லைப்புறம்.

[முத்தாயி தண்ணீர் குடத்துடன் வருகிறாள்.]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/18&oldid=1771089" இலிருந்து மீள்விக்கப்பட்டது