பக்கம்:அம்மையப்பன்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

அம்மையப்பன்

கதை வசனம்

மடாலய வெளிப்புறம்

ஒரு கோச் வந்து நிற்கிறது. பலதேவர், ராணி, எல்லோரும் இறங்கி உள்ளே செல்கின்றனர். கோச்சை ஓட்டிவந்த முத்தனும் இறங்குகிறான். அவன் குல்லாயை எடுக்கிறான். அதிலிருந்து படம் ஒன்று விழுகிறது. சுகதேவ் கண்டு விடுகிறான்.

சுக : ஏ! —— முத்தா ! என்ன படம் இது?

முத்: ஒன்றுமில்லை...

சுக : ஏ!... சும்மா காட்டு; பார்க்கலாம்... [காட்டுகிறான்.]

சுக : அடேடே !...முத்தா ! நான் இதுமாதிரி ஒரு படம் இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னால் எங்கேயோ பார்த்தது போலே ஞாபகம் !...

முத்: இப்போது நீங்கள் காணப்போகும்... இந்தப் படம் என் லட்சியக் கனவு... இன்ப விடிவெள்ளி... இரண்டொரு வாரங்களுக்கு முன் நீங்கள் பார்த்த படம் இந்தப் படத்தின் இன்னொரு பிரதி—— முற்றுப் பெறாத சித்திரம்...

சுக : ஒகோ ! அதுவும் உன்னுடையதுதானா?

முத்: ஆமாம் முன்னது கை தவறிப்போய் களவாடப்பட்டு விட்டது... ! நான் வேறு எழுதிக் கொண்டேன். அது... இது..

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அம்மையப்பன்.pdf/5&oldid=1769626" இலிருந்து மீள்விக்கப்பட்டது