7
வேதா : பழுதூர் விடுதலையைப் பற்றி அவருக்கென்ன கவலை ... அவர் என்ன உன்னைப்போல குருகிய நோக்கம் படைத்தவரா? இந்தப் பாப லோகத்திலிருந்து மக்கள் விடுதலை பெற்று பரலோகம் செல்ல வேண்டுமென்ற பரந்த நோக்கம் படைத்தவர் அவர்... பழுதூர் விடுதலையாம் விடுதலை......
இன்றைக்கே இளையராணி பூங்காவனம், வேங்கை நாட்டாரை விவாகம் செய்து கொள்ளட்டும் நாளைக்கே பழுதூருக்கு விடுதலை.
முத்தன்: விருப்பமற்ற விவாகம் விடுதலைக்கு தரும் விலையா?
வேதா : சரி—சரி— உன்னோடு பேச என்னால் முடியாது! அப்பா! விடுதலை வீரனே !... வேலையைப் பார்... நான் வருகிறேன்.
பூங்காவனம் அறை
★
[பூங்காவனம் முத்தனுக்காக பழங்களை எடுத்துக் கொண்டிருக்கிறாள். ]
பல : பூங்காவனம்- பூங்காவனம்........
பூங் : என்ன அண்ணா... என்ன விசேஷம் .....
பல : விசேஷமா! உனக்கு அண்ணனாகப் பிறந்து விட்டு, விசேஷம் வேற எனக்கு. இதோ பார் வேங்கை நாட்டரசன் ஓலையனுப்பி இருக்கிறான்.
பூங் : எப்போதும் போல என் திருமணத்தைப் பற்றித்தானே.......
பல : திருமணமா? அதைத்தான் அவன் மறந்து விட்டானே... இப்போது வந்திருக்கும் ஒலை... அரை லட்சம் பொன்னுக்கு... அவசர உத்திரவு. கப்பம் கட்டித்தீர வேண்டும் பூங்காவனம்... கப்பம் கட்டித் தீரவேண்டும்...
பூங்: வழக்கம் தானே அண்ணா இது!...