பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்டத்தின் சுழற்சி atšś என்று கூறி, நானும் உங்களை அழைக்கின்றேன். தாயு மானவர் கூறியபடி, 'காகமுறவு கலந்துண்ணக் கண்டீர் அகண்டாகார சிவ போகம் எனும் பேரின்ப வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமாய் ஏக உருவாய்க் கிடக்குது ஐயோ! இன்புற்றிட நாம் இனி எடுத்த தேகம் விழுமுன் புசிப்பதற்குச் சேரவாரும் செகத்திரே!' என்று உங்களை - உலகத்தவரை அழைக்கின்றேன். உணருங்கள் - உணர்த்துங்கள் - செயல்படுத்துங்கள்! செம்மை நலம்காணுங்கள். அப்போது இச்சகமே இறை 'வன் கோயிலாய்-இன்பச் சோலையாய்-எல்லையற்ற கருணையங் கடலாய்க் காட்சி தரும். நிர்வாண்" இந்நிலையினை நாட்டுக்கு நல்குவதாக! நலம் பெருகு வதாக இன்பம் செழிப்பதாக எழில் மிகுவதாக! வாழி! - - ఆజ్ఞకా