பக்கம்:அம்மையும் அப்பனும்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பன் அடித்தால் 77 வைப் பிரித்து இன்று அணுகுண்டினைச் செய்ய உதவி யவன் ஓர் இத்தாலியனேயாவன். கடந்த உலகப் போரை நிறுத்தியதே அனுதானே. அணுகுண்டு அடித்து அழிவு தராவிட்டால் அப்போர் இன்னும் எத்தனை ஆண்டுகள் நீடித்திருக்குமோ! யார் அறிவார்? அன்று பிரகலாதன் கூறிய அந்தக் கோன் தான் இன்றும் நம்மைப் போரால் தடிந்துத் தணிய வைத்தது. அமெரிக்காதான் அதைத் தயாரித்தது என்றாலும், அணுவைப் பல கூறாகக், கம்பன் காட்டியபடி, பிரிக்க முடியும் என்று பிரித்துக் காட்டி யவன் அன்று அமெரிக்காவில் வாழ்ந்த ஓர் இத்தாலி யனே. சிகாகோ நகரத்திலே அவனுக்கு ஒரு சிலையும் உண்டு என நினைக்கிறேன். அங்குள்ள பெரிய அணு ஆய்வுக்கூடத்தில் அந்த அணுவினால் என்னென்ன ஆக்கப் பணி செய்யலாம் என ஆராய்ந்து கொண்டே உள்ளனர். நம் பல பழங்கருத்துக்கள் அங்கே விஞ்ஞான வழி மெய்ப் பிக்கப் பெறுகின்றன. கூர்தல் அறம்' என்ற Evalution கொள்கையே தசாவதாரம் என நான் முன்னமே காட்டி யுள்ளேன். அந்த உண்மை ஆய்வின் மூலமும் வரை படங் கள் மூலமும் நன்கு விளக்கப் பெறுகின்றன. மறுபடியும் எங்கோ சென்று விட்டேன். இராவணன், கும்பகர்ணன் இருவருமே மூன்றாவது பிறவியில் கண்ணனுக்கு நெருங்கிய உறவினராக, கம்சன் சிசுபாலன் எனப் பிறந்தனர். கம்சன் தாய்மாமன், சிசு பாலன் அத்தைமகன். இவ்விருவரும் திருமாலாகிய கண்ண னாலே அடித்துத் திருத்தப் பெற்றனர். பின் அவர்கள் பழையபடியே வைகுண்டத்தே திருமாலின் வாயிற் காவலராகச் சென்றார்கள் என்று சொல்லவும் வேண் டுமோ! சிசுபாலனை வென்ற திருமாலாகிய கண்ணனின் சக்கரச் செயலை வில்லியார் அழகுறக் காட்டி, அது அவனை அழைத்துக் கொண்டு வுைகுந்தம் சென்று திருமாலின் திருக்கரத்தில் பொருந்தி நின்றது என்கின் றார். ஆம்! இனி அடுத்து வரும் கல்கி அவதாரம் இன்று