அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்
17
பிராண வாயுவை முதன் முதலில் கண்டுபிடித்தவர் அவரே. ஹைட்ரஜனும் பிராணவாயுவும் சேர்ந்த சேர்க்கைப் பொருள்தான் தண்ணீர் என நிரூபித்துக் காட்டியவர்.
மிகப் பெரிய செல்வந்தர்; திருமணம் செய்து கொள்ளாதவர்; சிறந்த எழுத்தாளரும் கூட. என்றாலும், தம்முடைய தொழில் பற்றிய காரியங்களைத் தவிர மற்றவற்றில் அவருடைய ஞாபகசக்தி பூஜ்யமே, இக்குறை காரணமாக அவரால் பிறருடன் நெருங்கிப்பழக இயலாமல் போயிற்று.
சமுதாயத்தின் வாழ்வுக்கு அஞ்சி, தம்முடைய வீட்டுக்குள்ளேயே பதினான்கு ஆண்டுகள் சிறைவாசம் போல் வாழ்ந்து வந்தார்.
அவருடைய உருவத்தை ஒவியர் தீட்டிக் கொண்டிருக்கும் போதே ஞாபக மறதியாய் அவர் வேறு பக்கமாகத் திரும்பிக் கொண்டார். ஆகவே, அதே பாவனையில்தான் ஓவியர் சித்திரத்தை வரைந்து முடிக்க வேண்டியதாயிற்று.
(17) விலை மதிப்பற்ற சிறப்புடையது
'இழந்த சொர்க்கம்' என்னும் உலகப் புகழ்பெற்ற காவியத்தை இயற்றிய கவிஞர் மில்டன், அந்தக் காவியத்துக்குப் பதிப்பாளரிடமிருந்து பெற்றுக்கொண்ட சன்மானம் எவ்வளவு என்று நினைக்கிறீர்கள்?
2