பக்கம்:அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்

31


இயங்குகிறது. ஏனென்றால், அதனால் எங்களுக்குச் சில உதவிகள் கிடைக்கின்றன. மேலும், எங்கள் வேலையும் எளிதாகி விடுகிறது” என்றார் கமிஷனர் மிகவும் அமைதியோடு.


(32) கிழவி சொன்ன யோசனை


அந்தச் சிடுமூஞ்சிக் கிழவி அன்பாகப் பேசி எவரும் கண்டதும் இல்லை; கேட்டதும் இல்லை.

அக்பர் சக்கரவர்த்தி கிழவியைப்பற்றி கேள்வியுற்றார். கிழவியின் கிடுமூஞ்சித் தனத்தை மாற்றக் கருதி, மாறுவேடத்தில் கிழவியைக் காணச் சென்றார்.

கிழவியோ ஆற்றைக் கடப்பதற்காகக் கரையிலே காத்திருந்தாள். படகு இருந்தது; ஆனால், படகோட்டியைத் தான் காணவில்லை. கிழவி சுற்று முற்றும் பார்த்துவிட்டுச் சிடுசிடு வென்று முகத்தை வைத்துக் கொண்டிருந்தாள்.

மாறுவேடத்தோடு தன் அருகில் வந்த அக்பரைக் கிழவி, "நீ எங்கே போக வேண்டும்? என்று கடுகடுப்போடு கேட்டாள்.

"அக்கரைக்கு” என்றார் மாறுவேட அக்பர்.

"உனக்குப் படகு ஒட்டத் தெரியுமா?” என்று கிழவி கேட்டாள்.