அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்
4
'90 வது வயதில்?’ என்று கேட்டார்கள்.
எடிசன் ஒருவிதமாக தலையை அசைத்து விட்டு, “30 ஆண்டுகளுக்குப்பிறகு நடக்கப் போகிற விஷயங்களைப்பற்றி யெல்லாம் நான் திட்டமிட்டுக் கொண்டிருப்பதில்லை”என்றார்.
(44)
வகுப்பு வேற்றுமை எங்கே?
அகில இந்திய காங்கிரஸின் முதல் தலைவர் W.C. பானர்ஜி என்ற கிறிஸ்தவர். இரண்டாவது காங்கிரஸ் தலைவர் தாதாபாய் நெளரோஜி என்னும் பார்ஸி. மூன்றாவது காங்கிரஸ் தலைவர் பக்ருதின் தயாப்ஜி என்ற முஸ்லீம். நான்காவது காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ்யூல் என்ற ஆங்கிலேயர்.
(45)
லட்சங்களுக்கு மத்தியில் சலசலப்பு
ஜிம்மி டியூராண்டியில் சட்ட மன்றம் கூடிய போது, பரபரப்பான விவாதம் நிகழ்ந்து கொண்டிருந்தது.
“நான், நம் கடற்படைக்கு 15 லட்சம் டாலர் வாக்கு அளிக்கிறேன்” என்றார்.
மற்றொரு உறுப்பினர் துள்ளி எழுந்து "நான் நம் தரைப்படைக்கு 25 லட்சம் டாலர் வாக்கு அளிக்கிறேன் என்றார்.