62
அயல்நாட்டு அறிஞர்கள் உதிர்த்த முத்துக்கள்
அவருக்குத் தொழிலாளர்களின் போக்குப் பிடிக்கவில்லை. ஆனால் அவர் ஒன்றும் சொல்லவில்லை.
ஒரு நாள், பல கடிகாரங்களை வாங்கி வந்து, தொழிற்சாலையின் பல மூலைகளிலும் பொருத்திவிட்டார். அது ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான மணி காட்டியது.
இந்தக் கடிகாரக் குழப்பத்தைக் கண்ட தொழிலாளர்களுக்கு மணி பார்ப்பதில் உள்ள ஆர்வமே போய் விட்டது. நேரம் என்ன ஆனால் என்ன? என்று எண்ணிபடி தங்களுடைய வேலைகளிலே கவனத்தைச் செலுத்தத் தொடங்கினார்கள்.
(67)
அதுவும் ரப்பர் பொம்மையா?
இளம் தாய் ஒருத்தி, தன் குழந்தையைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தாள்.
பக்கத்து வீட்டுச் சிறுமி, அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். சிறுமியின் இடுப்பிலே ரப்பர் பொம்மை ஒன்று இருந்தது. அந்தப் பொம்மைக்கு ஒரு காலும் இல்லை; ஒரு கையும் இல்லை. உடலும் நசுங்கிப் போயிருந்தது. -
இளந் தாயைப்பார்த்து, ‘மாமி இந்தப்பாப்பா உங்ககிட்ட வந்து எத்தனை நாள் ஆச்சு?” என்று கேட்டாள் சிறுமி ஆவலோடு.
மூன்று மாதம் என்றாள் தாய்.